Archives
Recent Articles
- Chinnayarpathi & Kilpunachi Tribal settlement Visit & Inventory Work
- 5000 Tree Saplings distributed from Nalvazhikatti & Selvalayam Trust
- Given 2 sewing machine for 2 tribal destitute womens
- Our Nalv Trust A/C number got changed, Please note new A/C details
- Piggy Banks to Tribal Children – பழங்குடி இன குழந்தைகளுக்கு உண்டியல்…
-
தாய்மையின் சின்னம், நம்பிக்கை நட்சத்திரம்,வாழ்க்கைக்கு வழிகாட்டி.
இப்படி தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர்
இவரின் அடையாளம் ஏழ்மையின் சின்னம்
இவர் வாழ்ந்த இந்த பூமியில் நாமும் வாழ்ந்தோம் என்று
நினைத்தாலே நாமும் நல்லது செய்யவண்டும் என்று
நினைக்கத்தோன்றும். அவ்வாறு நினைத்தாலே போதும்
அந்த காரியம் தானாக நடக்கும் , அதற்கு அந்த அன்னையின்
அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
நீங்களும் நன்மை செய்ய வேண்டும் என்று நினையுங்கள்
நிச்சயம் உங்களுக்கும் நிச்சயம் நன்மையே நடக்கும். 🙂
-
என் இனிய தமிழ் மக்களே ….
உங்களுக்கு ஒரு IT வீரனின் தினசரி போராட்டத்தை கவிதை நடையில்வர்ணித்துள்ளான் இந்த வாரதிராஜா …
நீங்கள் கேட்க்கவிருப்பது ஒரு software சுப்பனின் கிராமத்து காவியம் ,
இந்த படைபிற்க்காக
சுட்டது : பருத்தி வீரன் பாடலை
சுடாதது : ஆந்த பாடல் வரிகளைStart Mizik…
Team members:
ஊரோரம் IT- பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்
ஊரோரம் IT- பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்
நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera
நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmeraTeam members:
கூடுனுமே கூடுனுமே code அடிக்க மாடு போல
கூடுனுமே கூடுனுமே code அடிக்க மாடு போல
மாட்டுனமே மாட்டுனமே நார -PM கையிமேல
மாட்டுனமே மாட்டுனமே நார -PM கையிமேலPM:
நிறுத்துங்கடி , ஏ நிறுத்துங்கடி , நிறுத்துங்கிறேன்ல Code அடிங்கடின்னா என்னா நக்கலா
ஏய் Fresher நீ இங்க வா , டேய் associate நீ இங்க வா , எல்லாம் வரிசையா நில்லு
நல்லா keybordaa வளச்சு நெளிச்சு அடிக்கனும் என்னTeam meber:
யோவ் இங்க பாருய்யா keybordala கண்டவாக்குல கைவச்சின்னா உனக்கு deliveryகிடையாது ஆமாPM:
இங்க பார்யா கோவத்த , டேய் TL அட்ராTL:(Team Leader)
நாடரிஜ்ச fresher களா நீங்க எங்க சோடி ,
உங்கள வச்சுக்கவா projectula சொல்லிப்புடுங்கடி
C plus plus code அடிக்கும் சின்ன பைங்கிளி
C plus plus code அடிக்கும் சின்ன பைங்கிளி
ஓன்ன quarter க்கு associataaa தூக்கிவிடட்டுமா
ஓன்ன quarter க்கு associataaa தூக்கிவிடட்டுமாPM:
Codenna இப்படிதான் குத்தனும் , என்ன புரிஞ்சுதாProgrammer:
Design correct ல்லாத ப்ரொஜெக்ட்குள்ள ,
இப்போரவுசு பன்னும் PM தம்பி
நைட்டெல்லாம் codeaa குத்தி ,
எனக்கு கைய்யி ரெண்டும் வலிக்கிதுடா ,
கைய்யி ரெண்டும் வலிக்கிதுடாPM:
அட , ராவெல்லாம் codeaa குத்தி ,
உனக்கு கைய்யி ரெண்டும் நொந்தாலென்ன
இந்த experience உல்ல PM கிட்ட நீயும் பாசாங்கு பண்ணாதடிProgrammer:
experience உள்ள PM கிட்ட நானும் பாசாங்கு பண்ணவில்ல
பாசங்கு பண்ணுரெண்டு நீயும் அறிவுகெட்டு பேசாதடா ,
நீயும் அறிவுகெட்டு பேசாதடாTester:
அடி body மேல body வச்சி body க்குள்ள HTLML code வச்சிTL:
அட , அப்படி போடு SAppu (Senior Associate )Tester:
ஓட்டி ஓட்டி பாத்தாலும் என் Browser Trouser கிளியுதடாஅஹா அஹா அஹா ….
ஓட்ட Browser இந்த Browser Testeru க்கு கிளியப்போகுது Trouser
ஓட்ட Browser இந்த Browser Testeru க்கு கிளியப்போகுது TrouserTest Lead:
அட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு துக்கம் ஆகுதடா
ஆமா ஆமா ஆமோய் ….பொசகெட்ட பயேல ஒனக்கு test director கேக்குதடா
Test Manager:
QC ஈல (QC = Quality Centre)…
ஆமோய் ஆமோய் ஆமோய் …
QC ஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி ..
QC ஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி
நான் test planaai போட்டு வச்சென் MPP யில (MPP = Microsoft Project plan)
நான் test planaai போட்டு வச்சென் MPP யிலஆனா milestoneu கிட்ட mileuu தூரம் போகமுடியல
ஆனா milestoneu கிட்ட mileuu தூரம் போகமுடியலDesigner:
Risk குள்ள riska போட்டு escalateuu ஆக்கிப்புட்டு
Risk குள்ள riska போட்டு escalateuu ஆக்கிப்புட்டு
சப்பையான design changeu க்கு changeaa விடாம
சப்பையான design changeu க்கு changeaa விடாம
ஓங்கள அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க
ஓங்கள அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்கTL:(Team Leader)
அடி யாயி … ஆஹா ஆஹா ஆஹாELT: (Entry Level Trainee)
அள்ளி MPP யில estimateaa தூக்கி பொட்டு
அள்ளி MPP யில estimateaa தூக்கி பொட்டு
புள்ளி மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு
புள்ளி மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு
இப்பொ புலம்பினாக்க உங்கல நாங்க நம்பமுடியலPM:
போடா போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலேபோடா
போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலே
ELT batch சின்ன பய என்னென்னமோ பேசுரானே
designerkku எனக்கும் சண்டை , இப்போ உடைய போகுது மண்டை
அட designerkku எனக்கும் சண்டை , இப்போ உடையப்போகுது மண்டைPM & TL: என்ன fresher ங்கலா keyboarda கையில வச்சிகிட்டு தலைய சொரிஞ்சிக்கிட்டுநிக்கறீங்க , codeaa நீங்க அடிக்கறீங்கலா இல்ல நாங்க அடிக்கவா .
இப்படிக்கு என்றும் பால்முகம் மாரா … உங்கள் சுட்டிப்பய புள்ள
-
முதல் தலைமுறையில் கல்லூரி வந்தவர்கள் !
செய்ய கூடாத பாவத்தைச்
செய்ததுபோல் காணப்படுவார்கள்ஒரு நாளென்பது
ஒரு நாளாக அல்லாமல்
வேலாக அவர்களின் விலா எலும்பைக்
குத்திக் குடையும்இஸ்திரி இடப்படாத
அவர்களின் சட்டைச் சுருக்கங்கள்
அவர்களுக்குள் கட்டாய வருத்தங்களைக்
கொண்டுதரும்தன் சகாக்களின் முன்பாக
உணவுப் பொட்டலத்தைப் பிரிக்கத் தயங்கித்
தாமதமாக உண்பார்கள்
சமயத்தில் பட்டினியும்கிடப்பார்கள்இயல்பான தம் பேச்சுக்களை
ஏகடியம் செய்வார்களென்று
வெறுமனே தலையை மட்டும் ஆட்டுவார்கள்தேர்வைவிடவும்
தேர்வுக் கட்டணத்துக்காகக் கவலைப்படுவார்கள்அவர்கள் படிக்க வந்ததை மறந்து
நடிக்கத் தொடங்குவார்கள்ஆசை இருந்தும்
அழகிய பெண்களை/ஆண்களை
ஆழ்ந்து ரசிக்கத் தயங்குவார்கள்முடிவாய்ச் சொல்வதெனில்,
முதல் தலைமுறையில்
கல்லூரிக்குள் நுழைபவர்கள்
தங்கள் மூதாதையர்களின் அழுகையையும் சேர்த்து
அழுதுகொண்டிருப்பார்கள்!சமிபத்தில் விகடனில் படித்த கவிதை….. நம்மில் பலரது அனுபவமும் இதுவாக தான் இருந்திருக்கும்ல??
மாற்றங்களை எதிர்நோக்கிய பயணத்தின் முதல் அடியை எங்களோடு எடுத்து வையுங்கள் ! !
9600579018 / 9578675904
-
கறை படரதுஆல நல்லது நடந்தா “கறை நல்லது” தானே 🙂
-
நீ கொஞ்சும் நாய் குட்டி நானடி….
***இரு விழிகளில் காதல் அறிக்கை எழுதி நீ படிக்கும் போது.. *****கட கடவென இதயம் முன்னில்… வெளினடிபு செய்யுதம்மா…. *****
பேசாத உதடு,துடிக்காத இதயம். உன்னாலே என் ஜீவன் ஏங்குதே….. ****
தோடு தொடுவேன விரல்கள் எல்லாம்.. உன்னைப் பார்த்து சொல்லும் போது… ****
தடா தடவென உயிரின் ஓசை .. தயக்கத்தோடு நடுங்குதம்மா……. ****
தாயோடு பிறந்தே,உன்னோடு வளந்தேன்.. நீ கொஞ்சும் நாய் குட்டி நானடி….
-
திரும்பி வந்துவிடு என் singapore கணவா…
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து
முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
கெஞ்சுபவனைப்போல…
மல்லிகைப்பூ தந்துவிட்டு
மன்றாடுகிறாய்!பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய்
நடிக்கும் சின்னப்பையனைபோல…
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது…
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க
முயலும்போது குளிரடிப்பதாய் கூறி –
ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்…
கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்கெஞ்சுவதும்… மிஞ்சுவதும்…
அழுவதும்… அணைப்பதும்…
கண்டிப்பதும்… கண்ணடிப்பதும்…
இடைகிள்ளி… நகை சொல்லி…
அந்நேரம் சொல்வாயடா “அடி கள்ளி ”
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு…
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்…
என் singapore கணவா!
கணவா… – எல்லாமே கனவா….???
கணவனோடு இரண்டு மாதம்…
கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா…?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ …
5 வருடமொருமுறை ஒலிம்பிக்….
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்… …
1 வருடமொருமுறை கணவன் …
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
ٌஇது வரமா ..? சாபமா..?கண்களின் அழுகையை…
கண்ணாடி தடுக்குமா கணவா?
நான் தாகத்தில் நிற்கிறேன் – நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் – நீ விசாவை காட்டுகிறாய்
திரும்பி வந்துவிடு என் singapore கணவா…
வாழ்வின் அர்த்தம் புரிந்துவாழலாம்விட்டுகொடுத்து… தொட்டு பிடித்து…
தேவை அறிந்து… சேவை புரிந்து…
உனக்காய் நான் விழித்து… எனக்காக நீ உழைத்து…
தாமதத்தில் வரும் தவிப்பு… தூங்குவதாய் உன் நடிப்பு…வார விடுமுறையில் பிரியாணி…
காசில்லா நேரத்தில் பட்டினி…
இப்படி… காமம் மட்டுமன்றி
எல்லா உணர்ச்சிகளையும் நாம்
பரிமாறிக் கொள்ளவேண்டும்இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு
வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு
நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்… பாரத வங்கி ! பாசம் தருமா?
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு
ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு
அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே
விட்டுவிட்டாயோ என் இதயத்தை?பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு…
நீ தங்கம் தேடிsingapore சென்றாயே?
பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!வாழ்க்கை பட்டமரமாய் போன…
பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம்
நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
உன் singapore தேடுதலில்….
தொலைந்து போனது – என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு –
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்…கிழித்துவிடு!விசாரித்து விட்டு போகாதே,
கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!திரும்பி வந்துவிடு என் singapore கணவா…
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்-எனது விழியில் கண்ணீருடன்….
(உங்கள் அன்பு மனைவி)(“தாய்க்குப்பின் தாரம்” என்பார்கள். அப்படிபட்ட புனிதமான உறவான மனைவியை குடும்ப சூழ்நிலையின் காரணமாக பிரிந்து வாழும் அனைத்து வெளிநாட்டு நண்பர்களுக்கும் இந்த கடிதப் பதிவு ஒரு சமர்ப்பனம்)
(பெண்ணின் உணர்வுகளை சொல்லியிருக்கும் இந்த கடித வடிவிலான கவிதையை மின்னஞ்சலில் அனுப்பி பகிர்ந்துகொள்ள சொன்ன தோழிக்கு மனமார்ந்த நன்றி)
*********************************** -
சொர்க்கம் -எது சொர்க்கம் ?
வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் (பெண்களுடன்) விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போகுமோ?வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா….E-Mail ல் வந்தது……
-
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு:தமிழாக்கம் பாகம் -1 , வரவேற்புக்கு மறு மொழி-செப்டம்பர்,11 ,1893
அமெரிக்க சகோதரிகளே சகோதரர்களே !!!
இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழி கூற இப்போது உங்கள் முன் நிற்கின்றேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகின்றது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப் பழமை வாய்ந்த துறவியரின் பரம்பரை பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன். அனைத்து மதங்களின் அன்னையின் பெயரால் நன்றி கூறுகின்றேன். பல்வேறு இனங்களையும், பிரிவுகளையும் சார்ந்த இந்து பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகின்றேன். இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றி குறிப்பிடும்போது வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பலநாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை இவர்களைத்தான் சாரும் என்று கூறினார்கள், அவர்களுக்கும் எனது நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், ஆகியவற்றை எதிப்பு இன்றி ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்திற்கு புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் மிகவும் பெருமை அடைகின்றேன். எதையும் வெறுக்காமல் மதிக்கவேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக்கொள்ளவும் செய்கின்றோம்.
உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைபடுத்தப் பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகின்றேன். ரோம்மணிரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து, சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்த கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனதாரத் தழுவிக் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகின்றேன். மேலும் பெருமை மிக்க சொராஸ்திரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கின்றேன்.
அன் அருமை சகோதர்களே!!! பிள்ளை பருவத்திலிருந்து நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள்தோறும், இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு உங்கள் முன் குறிப்பிட விரும்புகின்றேன்.
“எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் தன்மையினைப் போன்றுலகோர்
பின்பற்று தன்மை யாலே
சங்கமிகு நெறி பலவாய் நேராம்
வளைவாம் தோன்றினாலும்
அங்கு அவைதாம் எம்பெரும!! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறேயன்றோ!!!
இதுவரை நடந்துள்ள மாநாடுகளில் மிக, மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்த பேரவை, கீதையில் உபதேசிக்கப்பட்டுள்ள பின்வரும் அறுபுதமான உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். யார் எந்த வழியாக என்னிடம் வரமுயன்றாலும் நான் அவர்களை அடைகின்றேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கின்றார்கள். அவையெல்லாம், இறுதியில் என்னையே அடைகின்றன.
பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த பூமியினை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும், மீண்டும் மூழ்கடித்து நாகரீகத்தை அழித்து எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்து விட்டன. அந்த கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதைவிட பன்மடங்கு உயர்நிலை எய்தியிருக்கும். அவற்றிற்கான அழிவு காலம் வந்துவிட்டது. இந்த பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணியோசை மதவேரிகளுக்கும், வாளாலும், பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் அடிக்கும் சாவு மணி ஒசையாகும் என்று நான் திடமாக நம்புகின்றேன்.
அடுத்ததாக “நாம் ஏன் ஒத்துப் போவதில்லை” என்ற தலைப்பில் செப்டம்பர் 15 திகதி 1983 -ல் ஆற்றிய உரை தொடரும் …அன்புடன் கே எம் தர்மா…(28 APRIL 2011)
நன்றி ..ஆங்கில மற்றும் தமிழ் பதிவுகளை பெற உதவிய வலைதலங்களுக்கும், வழிகாட்டிய நண்பர்களுக்கும்.
-
புன்னகைக்க மட்டுமல்ல புரிதலுக்கும்….
ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். ` அதற்கு அந்த ஞானி, ”அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது. ”என்றார்.கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, ”எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? ”என்று கேட்டார். சீடன் சொன்னான், ‘குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது. ` ‘ புன்முறுவலோடு ஞானி சொன்னார்,”இது தான் காதல்.” ` பின்னர் ஞானி,”சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.” சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார்,”இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? ”சீடன் சொன்னான், ‘இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.’ ` இப்போது ஞானி சொன்னார், ”இது தான் திருமணம்.”
— ஓஷோ—
-
கதை சொல்லி – அ. வெண்ணிலா (A. Vennila)
“என் உடலை விதைத்திருக்கிறார்கள்
என் மார்புக் காம்புகள் நீரூற்ற
பூச்செடிகளும் மரங்களும்
துளிர் வி ட்டு வளர்ந்து
விருட்சமாயிருந்தன.
விளையாட
சிட்டுக் குருவிகளும் புறாக்களும்
போட்டியிட்டன.உழுதார்கள் விதைத்தார்கள்
அறுவடை செய்தார்கள்.
காலாதீதத்தில்
என் உடல்
நல்ல விளைநிலமாயிருந்தது.
வண்ணத்துப் பூச்சிகளும்
தேடி வரும் ஆவலில்
பூச்செடிகளுக்காய் ஏங்கியிருந்தேன்.
முட்களுக்கும் சுள்ளிகளுக்கும்
அதிக தேவையிருந்ததால்
என் உடலில் அதிகம் விதைத்தார்கள்.என் பால் வாசம் நுகர்ந்து
வேலி வரை வந்து
உள் நுழைய முடியாமல்
தவித்துக் கொண்டிருக்கும்
வண்ணத்துப் பூச்சிகளுக்காகவும்
தட்டான்களுக்காகவும்
என் உடலை சுருட்டிக் கொண்டு
தொட்டிச் செடி பூவாக்கி
காத்திருக்கிறேன்.
சூரியனுக்கு வெகு கீழே.”– அ.வெண்ணிலா.
கதை சொல்லிக்காக சென்னையிலிருந்து வந்தவாசி செல்வதற்கு வெளிக்கிட மதியத்தை தாண்டிவிட்டிருந்தது. கவிஞர் அ.வெண்ணிலா பின்னேரம் நான்கு முப்பது மணிக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார். சென்னையிலிருந்து வந்தவாசிக்கு இரண்டரை மணித்தியாளத்திற்குள் சென்று விடலாம் அல்லது அதிகபட்சம் மூன்று மணித்தியாளம். பேருந்தின் சன்னலில் வாய் பார்த்து வந்து கொண்டிருந்தேன்.வேடிக்கைப் பார்ப்பது சிறுவயதில் இருந்தே அறியாமல் என்னுள் தொற்றிக் கொண்ட விடயம். ‘ஒருவேலைக்கு அனுப்பினா கப்பல் பார்க்க விட்ட சேவகன் மாதிரி இல்லாம கெதியாண்டு வீட்டுக்கு வந்து சேர்’என்னும் வசவோடே வீட்டில் வளர்ந்தேன். காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இன்னும் தீர்ந்தபாடில்லை. காணக் காண கிடைக்கும் போதை திகட்டுவதில்லை. நானற்ற நிலையில் சிந்திப்பதற்கும் காட்சி வெளி தேவையாக இருக்கிறது
சாலையின் இருமங்கிலும் ஆச்சிரியப் பட வைத்தவை கிழடு தட்டிப் போன மரங்கள். பழமையான ஊர் என்பதற்கு சாட்சிகளாக நின்று கொண்டிருந்தன. அனேகமான மரங்களில் பட்டைகள் கிழவனின் முகச்சுருக்கங்கள் போல் மாறிவிட்டிருந்தது. சில மரங்களில் தண்டுகள் பொக்கை வாய்களாய் உள்வற்றிப்போய் சிறு தடி போல் நின்று பெரும் கிளைகளை தாங்கிக் கொண்டு நின்றது. பச்சை நிற இலைகள்இன்னும் பசுமையான வசந்தங்களைப் காணப் போவதை சொல்லிக் கொண்டிருந்தது. முன்னர் அங்கங்கே வெட்டி விடப்பட்ட கிளைகள் மரத்தில் கண்களைப் போல மாறியிருந்தது. பேருந்து செல்லும் வழிகளிலெல்லாம் பழமையான கோவில்களை காண முடிந்தது. ஊரின் பெயர்ப் பலகைகளும் மிக விசித்திரமான அழகான பெயர்களைத் தாங்கி நின்றது.
வந்தவாசி பேருந்து நிலையத்தில் இறங்கி சற்றுத் தொலைவில் உள்ள அம்மையப்பட்டு என்னும் ஊரில் உள்ள பாடகசாலைக்கு கொஞ்சம் தள்ளி உள்ள பாதையில் இருக்கிறது அ.வெண்ணிலாவின் வீடு. வெண்ணிலாவின் வீட்டின் பெயர் அகநி இல்லம். அகநி என்பது மூன்று குட்டி இளவரசிகளின் பெயர்களுடைய முதல் எழுத்து. அ = அன்புபாரதி, க = கவின் மொழி, நி = நிலாபாரதி. இதில் அன்புபாரதியும், நிலாபாரதியும் இரட்டையர்கள். வெண்ணிலாவின் கணவரும் கவிஞர். அம்மா அப்பா இருவரும் கவிஞர்களாக இருப்பாதல் குழந்தைகளுக்கும் கவிதை மேல் நாட்டம் இயல்பாக இருக்கிறது. மூவருக்கும் வாழ்க்கை தேர்வு மருந்துவர், ஆட்சியர் என பட்டியலிட்டாலும் தவறாமல் ஒரு மாற்றுத் தேர்வாக கவிஞர் ஆவதையும் குறிக்கோளாக வைத்துள்ளார்கள். கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, பொது அறிவுப்போட்டியென பரிசுகளை வென்று வரத் தொடங்கி விட்டார்கள்.
தேனீர் உபசரிப்புடன் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டபின் கதைகளை பதிவு செய்யத்தொடங்கினோம். வெண்ணிலா கதை சொன்ன விதம் நிறம்ப அழகு.
அவர் குரலின் இனிமை கதைகளோடு ஒட்டிக் கொண்டது. கதைகளைச் சொல்லும் போது அவர் குரலில் ஏற்ற இறக்கங்கள் கதாபாத்திரங்களின் ஒத்த தன்மையோடு மாறிவிடும். சில நேரங்களில் கதாபாத்திரங்களை போல் நடித்துக் காண்பித்து கதைகள் சொல்கிறார். தாயையும் மகளையும் பற்றி வரும் சிறுகதையில் அவரே தாயாகவும் மகளாகவும் உருமாறிக் கொண்டிருந்தார். ‘மலம்’ கதையில் வரும் துன்பியல் நகைச்சுவையை தன் மனதில் உள்ளதை வார்த்தைகளில் வழி கடத்துவது அவ்வளவு எளிதல்ல. பாதிரியாரின் நிலையை எளிதாக கற்பனை செய்ய முடிந்திருந்தது அவர் குரலில். தன்னுடைய சிறுகதையைச் சொல்லும் போது ‘அவ்வளவு பட்டாம்பூச்சி’ என்கிற பொழுது அவர் கண்களும் மூடியேஇருந்தது.
“காக்கா கதை
குட்டி இளவரசி கதை
தேவதை கதை என
சொல்லி மகிழ்ந்த
பேச்சுக்களைப் பரிமாறிய
இரவொன்றில்
நம்மால்
குழந்தைகளைப் போல்
கட்டியணைத்து
உறங்க முடிந்தது”– அ.வெண்ணிலா
அடுத்து தொடங்கியது மழலைகளின் கதை சொல்லல். அவர்கள் கதைகளுக்குள் நுழைய அவர்களின் வயதினராலேயே முடியும். அதியுயர்ந்த கற்பனைகளுக்கெல்லாம் இடம் கொடுக்கும் வயது அது. அவர்களின் நகைச்சுவை உணர்வு நம்மைப் போல் மழுங்கிய ஒன்றல்ல. சிரிப்பும் கற்பனையும் அதன் உன்னத நிலையில் செயல்படும் தருணங்கள் அது. நிறைய கதைகளைத் தமக்குள் வைத்துக்கொண்டிருந்தார்கள். முல்லாக் கதைகள் தொடங்கி அவர்களுள் நிறைந்திருந்த கதைகள் ஏராளம். கதைகள் சொல்ல அவர்கள் எந்த தயக்கமும் காட்டவில்லை. கதைகளை ஆரம்பித்தால் போதும் சொல்லிக்கொண்டே சென்றார்கள்.
கதை சொல்லி முடித்து வெளியே வந்தேன் . இருட்டிய வானில் அரை நிலவோடு வெள்ளிகள் மிகப்பிரகாசமாக் மின்னிக் கொண்டிருந்தன. குதுகாலிக்கும் மனநிலையை என்னுள் கிளறி விட்டது. ‘கப்பல் பார்க்க விட்ட சேவகன் என்ன செய்திருப்பான்’ என சிறுவயது முதல் யோசித்திருக்கிறேன். பதிலில்லை. இந்த சேவகன் கதைகளோடு கதைகளின் வாசனையோடு தன்னை இழந்து திரும்புகிறான்.
அ. வெண்ணிலாவின் கதைகளை கேட்க கீழே உள்ள ப்ளே ஐகானை அழுத்தவும்.
http://koodu.thamizhstudio.com/kadhaisolli_18.php