• கல்வி ஆராய்ச்சிகள் பகுதியில் மொழி கற்பித்தலுக்கான புதிய அணுகுமுறை..-பொள்ளாச்சி நசன்

    http://www.naalorunool.com/kal/arachi/innov/innvo89-u8.htm

    மேலுள்ள இணைப்பில் கல்வி ஆராய்ச்சிகள் பகுதியில் மொழி கற்பித்தலுக்கான
    புதிய அணுகுமுறைக்கான படியானது. இது பொள்ளாச்சி நசன் அவர்களால்
    தரப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து படித்துப் பார்த்து உங்கள் கருத்தை
    எழுதவும்.

    பொள்ளாச்சி நசன்

    இப்படிக்கு,
    பொள்ளாச்சி அருண்பாலாஜி,
    9600085388

    4 Comments
  • கதை சொல்லி – அ. வெண்ணிலா (A. Vennila)

    “என் உடலை விதைத்திருக்கிறார்கள்
    என் மார்புக் காம்புகள் நீரூற்ற‌
    பூச்செடிகளும் மரங்களும்
    துளிர் வி ட்டு வளர்ந்து
    விருட்சமாயிருந்தன.
    விளையாட
    சிட்டுக் குருவிகளும் புறாக்களும்
    போட்டியிட்டன.

    உழுதார்கள் விதைத்தார்கள்
    அறுவடை செய்தார்கள்.
    காலாதீதத்தில்
    என் உடல்
    நல்ல விளைநிலமாயிருந்தது.
    வண்ணத்துப் பூச்சிகளும்
    தேடி வரும் ஆவலில்
    பூச்செடிகளுக்காய் ஏங்கியிருந்தேன்.
    முட்களுக்கும் சுள்ளிகளுக்கும்
    அதிக தேவையிருந்ததால்
    என் உடலில் அதிகம் விதைத்தார்கள்.

    என் பால் வாசம் நுகர்ந்து
    வேலி வரை வந்து
    உள் நுழைய முடியாமல்
    தவித்துக் கொண்டிருக்கும்
    வண்ணத்துப் பூச்சிகளுக்காகவும்
    தட்டான்களுக்காகவும்
    என் உடலை சுருட்டிக் கொண்டு
    தொட்டிச் செடி பூவாக்கி
    காத்திருக்கிறேன்.
    சூரிய‌னுக்கு வெகு கீழே.”

    – அ.வெண்ணிலா.

    கதை சொல்லிக்காக சென்னையிலிருந்து வந்தவாசி செல்வதற்கு வெளிக்கிட மதியத்தை தாண்டிவிட்டிருந்தது. கவிஞர் அ.வெண்ணிலா பின்னேரம் நான்கு முப்பது மணிக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார். சென்னையிலிருந்து வந்தவாசிக்கு இரண்டரை மணித்தியாளத்திற்குள் சென்று விடலாம் அல்லது அதிகபட்சம் மூன்று மணித்தியாளம். பேருந்தின் சன்னலில் வாய் பார்த்து வந்து கொண்டிருந்தேன்.வேடிக்கைப் பார்ப்பது சிறுவயதில் இருந்தே அறியாமல் என்னுள் தொற்றிக் கொண்ட விடயம். ‘ஒருவேலைக்கு அனுப்பினா கப்பல் பார்க்க விட்ட சேவகன் மாதிரி இல்லாம கெதியாண்டு வீட்டுக்கு வந்து சேர்’என்னும் வசவோடே வீட்டில் வளர்ந்தேன். காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இன்னும் தீர்ந்தபாடில்லை. காணக் காண கிடைக்கும் போதை திகட்டுவதில்லை. நான‌ற்ற‌ நிலையில் சிந்திப்ப‌த‌ற்கும் காட்சி வெளி தேவையாக‌ இருக்கிற‌து

    சாலையின் இருமங்கிலும் ஆச்சிரியப் பட வைத்தவை கிழடு தட்டிப் போன மரங்கள். பழமையான ஊர் என்பதற்கு சாட்சிகளாக நின்று கொண்டிருந்தன. அனேகமான மரங்களில் பட்டைகள் கிழவனின் முகச்சுருக்கங்கள் போல் மாறிவிட்டிருந்தது. சில மரங்களில் தண்டுகள் பொக்கை வாய்களாய் உள்வற்றிப்போய் சிறு தடி போல் நின்று பெரும் கிளைகளை தாங்கிக் கொண்டு நின்றது. பச்சை நிற இலைகள்இன்னும் பசுமையான வசந்தங்களைப் காணப் போவதை சொல்லிக் கொண்டிருந்தது. முன்னர் அங்கங்கே வெட்டி விடப்பட்ட கிளைகள் மரத்தில் கண்களைப் போல மாறியிருந்தது. பேருந்து செல்லும் வழிகளிலெல்லாம் பழமையான கோவில்களை காண முடிந்தது. ஊரின் பெயர்ப் பலகைகளும் மிக விசித்திரமான அழகான பெயர்களைத் தாங்கி நின்றது.

    வந்தவாசி பேருந்து நிலையத்தில் இறங்கி சற்றுத் தொலைவில் உள்ள அம்மையப்பட்டு என்னும் ஊரில் உள்ள பாடகசாலைக்கு கொஞ்சம் தள்ளி உள்ள பாதையில் இருக்கிறது அ.வெண்ணிலாவின் வீடு. வெண்ணிலாவின் வீட்டின் பெயர் அகநி இல்லம். அகநி என்பது மூன்று குட்டி இளவரசிகளின் பெயர்களுடைய முதல் எழுத்து. அ = அன்புபாரதி, க = கவின் மொழி, நி = நிலாபாரதி. இதில் அன்புபாரதியும், நிலாபாரதியும் இரட்டையர்கள். வெண்ணிலாவின் கணவரும் கவிஞர். அம்மா அப்பா இருவரும் கவிஞர்களாக இருப்பாதல் குழந்தைகளுக்கும் கவிதை மேல் நாட்டம் இயல்பாக இருக்கிறது. மூவருக்கும் வாழ்க்கை தேர்வு மருந்துவர், ஆட்சியர் என பட்டியலிட்டாலும் தவறாமல் ஒரு மாற்றுத் தேர்வாக கவிஞர் ஆவதையும் குறிக்கோளாக வைத்துள்ளார்கள். கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, பொது அறிவுப்போட்டியென பரிசுகளை வென்று வரத் தொடங்கி விட்டார்கள்.

    தேனீர் உபசரிப்புடன் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டபின் கதைகளை பதிவு செய்யத்தொடங்கினோம். வெண்ணிலா கதை சொன்ன விதம் நிறம்ப அழகு.

    அவர் குரலின் இனிமை கதைகளோடு ஒட்டிக் கொண்டது. கதைகளைச் சொல்லும் போது அவர் குரலில் ஏற்ற இறக்கங்கள் கதாபாத்திரங்களின் ஒத்த தன்மையோடு மாறிவிடும். சில நேரங்களில் கதாபாத்திரங்களை போல் நடித்துக் காண்பித்து கதைகள் சொல்கிறார். தாயையும் மகளையும் பற்றி வரும் சிறுகதையில் அவரே தாயாகவும் மகளாகவும் உருமாறிக் கொண்டிருந்தார். ‘மலம்’ கதையில் வரும் துன்பியல் நகைச்சுவையை தன் மனதில் உள்ளதை வார்த்தைகளில் வழி கடத்துவது அவ்வளவு எளிதல்ல. பாதிரியாரின் நிலையை எளிதாக கற்பனை செய்ய முடிந்திருந்தது அவர் குரலில். தன்னுடைய சிறுகதையைச் சொல்லும் போது ‘அவ்வளவு பட்டாம்பூச்சி’ என்கிற பொழுது அவர் கண்களும் மூடியேஇருந்தது.

     

    “காக்கா க‌தை
    குட்டி இள‌வர‌சி க‌தை
    தேவதை க‌தை என‌
    சொல்லி ம‌கிழ்ந்த‌
    பேச்சுக்க‌ளைப் ப‌ரிமாறிய‌
    இர‌வொன்றில்
    ந‌ம்மால்
    குழ‌ந்தைக‌ளைப் போல்
    க‌ட்டிய‌ணைத்து
    உற‌ங்க‌ முடிந்த‌து”

    – அ.வெண்ணிலா

    அடுத்து தொடங்கியது மழலைகளின் கதை சொல்லல். அவர்கள் கதைகளுக்குள் நுழைய அவர்களின் வயதினராலேயே முடியும். அதியுயர்ந்த கற்பனைகளுக்கெல்லாம் இடம் கொடுக்கும் வயது அது. அவர்களின் நகைச்சுவை உணர்வு நம்மைப் போல் மழுங்கிய ஒன்றல்ல. சிரிப்பும் க‌ற்ப‌னையும் அத‌ன் உன்ன‌த‌ நிலையில் செய‌ல்ப‌டும் த‌ருண‌ங்க‌ள் அது. நிறைய‌ க‌தைக‌ளைத் த‌ம‌க்குள் வைத்துக்கொண்டிருந்தார்க‌ள். முல்லாக் க‌தைக‌ள் தொட‌ங்கி அவ‌ர்க‌ளுள் நிறைந்திருந்த‌ க‌தைக‌ள் ஏராள‌ம். க‌தைக‌ள் சொல்ல‌ அவ‌ர்க‌ள் எந்த‌ த‌ய‌க்க‌மும் காட்ட‌வில்லை. க‌தைக‌ளை ஆர‌ம்பித்தால் போதும் சொல்லிக்கொண்டே சென்றார்க‌ள்.

    க‌தை சொல்லி முடித்து வெளியே வ‌ந்தேன் . இருட்டிய‌ வானில் அரை நில‌வோடு வெள்ளிக‌ள் மிக‌ப்பிர‌காச‌மாக் மின்னிக் கொண்டிருந்த‌ன‌. குதுகாலிக்கும் ம‌ன‌நிலையை என்னுள் கிள‌றி விட்ட‌து. ‘க‌ப்ப‌ல் பார்க்க‌ விட்ட‌ சேவ‌க‌ன் என்ன‌ செய்திருப்பான்’ என‌ சிறுவ‌ய‌து முதல் யோசித்திருக்கிறேன். பதிலில்லை. இந்த‌ சேவ‌க‌ன் க‌தைக‌ளோடு க‌தைக‌ளின் வாச‌னையோடு த‌ன்னை இழ‌ந்து திரும்புகிறான்.

    அ. வெண்ணிலாவின் கதைகளை கேட்க கீழே உள்ள ப்ளே ஐகானை அழுத்தவும்.


    http://koodu.thamizhstudio.com/kadhaisolli_18.php

    No Comments
  • என் இனிய தமிழ் மக்களே ….

    உங்களுக்கு ஒரு IT வீரனின் தினசரி போராட்டத்தை கவிதை நடையில்வர்ணித்துள்ளான் இந்த வாரதிராஜா …

    நீங்கள் கேட்க்கவிருப்பது ஒரு software சுப்பனின் கிராமத்து காவியம் ,

    இந்த படைபிற்க்காக
    சுட்டது : பருத்தி வீரன் பாடலை
    சுடாதது : ஆந்த பாடல் வரிகளை

    Start Mizik…

    Team members:
    ஊரோரம் IT- பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்
    ஊரோரம் IT- பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்
    நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera
    நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera

    Team members:
    கூடுனுமே கூடுனுமே code அடிக்க மாடு போல
    கூடுனுமே கூடுனுமே code அடிக்க மாடு போல
    மாட்டுனமே மாட்டுனமே நார -PM கையிமேல
    மாட்டுனமே மாட்டுனமே நார -PM கையிமேல

    PM:
    நிறுத்துங்கடி , ஏ நிறுத்துங்கடி , நிறுத்துங்கிறேன்ல Code அடிங்கடின்னா என்னா நக்கலா
    ஏய் Fresher நீ இங்க வா , டேய் associate நீ இங்க வா , எல்லாம் வரிசையா நில்லு
    நல்லா keybordaa வளச்சு நெளிச்சு அடிக்கனும் என்ன

    Team meber:
    யோவ் இங்க பாருய்யா keybordala கண்டவாக்குல கைவச்சின்னா உனக்கு deliveryகிடையாது ஆமா

    PM:
    இங்க பார்யா கோவத்த , டேய் TL அட்ரா

    TL:(Team Leader)
    நாடரிஜ்ச fresher களா நீங்க எங்க சோடி ,
    உங்கள வச்சுக்கவா projectula சொல்லிப்புடுங்கடி
    C plus plus code அடிக்கும் சின்ன பைங்கிளி
    C plus plus code அடிக்கும் சின்ன பைங்கிளி
    ஓன்ன quarter க்கு associataaa தூக்கிவிடட்டுமா
    ஓன்ன quarter க்கு associataaa தூக்கிவிடட்டுமா

    PM:
    Codenna இப்படிதான் குத்தனும் , என்ன புரிஞ்சுதா

    Programmer:
    Design correct ல்லாத ப்ரொஜெக்ட்குள்ள ,
    இப்போரவுசு பன்னும் PM தம்பி
    நைட்டெல்லாம் codeaa குத்தி ,
    எனக்கு கைய்யி ரெண்டும் வலிக்கிதுடா ,
    கைய்யி ரெண்டும் வலிக்கிதுடா

    PM:
    அட , ராவெல்லாம் codeaa குத்தி ,
    உனக்கு கைய்யி ரெண்டும் நொந்தாலென்ன
    இந்த experience உல்ல PM கிட்ட நீயும் பாசாங்கு பண்ணாதடி

    Programmer:
    experience உள்ள PM கிட்ட நானும் பாசாங்கு பண்ணவில்ல
    பாசங்கு பண்ணுரெண்டு நீயும் அறிவுகெட்டு பேசாதடா ,
    நீயும் அறிவுகெட்டு பேசாதடா

    Tester:
    அடி body மேல body வச்சி body க்குள்ள HTLML code வச்சி

    TL:
    அட , அப்படி போடு SAppu (Senior Associate )

    Tester:
    ஓட்டி ஓட்டி பாத்தாலும் என் Browser Trouser கிளியுதடா

    அஹா அஹா அஹா ….
    ஓட்ட Browser இந்த Browser Testeru க்கு கிளியப்போகுது Trouser
    ஓட்ட Browser இந்த Browser Testeru க்கு கிளியப்போகுது Trouser

    Test Lead:
    அட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு துக்கம் ஆகுதடா
    ஆமா ஆமா ஆமோய் ….

    பொசகெட்ட பயேல ஒனக்கு test director கேக்குதடா

    Test Manager:
    QC ஈல (QC = Quality Centre)…
    ஆமோய் ஆமோய் ஆமோய் …
    QC ஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி ..
    QC ஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி
    நான் test planaai போட்டு வச்சென் MPP யில (MPP = Microsoft Project plan)
    நான் test planaai போட்டு வச்சென் MPP யில

    ஆனா milestoneu கிட்ட mileuu தூரம் போகமுடியல
    ஆனா milestoneu கிட்ட mileuu தூரம் போகமுடியல

    Designer:
    Risk குள்ள riska போட்டு escalateuu ஆக்கிப்புட்டு
    Risk குள்ள riska போட்டு escalateuu ஆக்கிப்புட்டு
    சப்பையான design changeu க்கு changeaa விடாம
    சப்பையான design changeu க்கு changeaa விடாம
    ஓங்கள அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க
    ஓங்கள அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க

    TL:(Team Leader)
    அடி யாயி … ஆஹா ஆஹா ஆஹா

    ELT: (Entry Level Trainee)
    அள்ளி MPP யில estimateaa தூக்கி பொட்டு
    அள்ளி MPP யில estimateaa தூக்கி பொட்டு
    புள்ளி மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு
    புள்ளி மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு
    இப்பொ புலம்பினாக்க உங்கல நாங்க நம்பமுடியல

    PM:
    போடா போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலேபோடா
    போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலே
    ELT batch சின்ன பய என்னென்னமோ பேசுரானே
    designerkku எனக்கும் சண்டை , இப்போ உடைய போகுது மண்டை
    அட designerkku எனக்கும் சண்டை , இப்போ உடையப்போகுது மண்டை

    PM & TL: என்ன fresher ங்கலா keyboarda கையில வச்சிகிட்டு தலைய சொரிஞ்சிக்கிட்டுநிக்கறீங்க , codeaa நீங்க அடிக்கறீங்கலா இல்ல நாங்க அடிக்கவா .

    இப்படிக்கு என்றும் பால்முகம் மாரா … உங்கள் சுட்டிப்பய புள்ள

    No Comments
  • நீ கொஞ்சும் நாய் குட்டி நானடி….
    ***இரு விழிகளில் காதல் அறிக்கை எழுதி நீ படிக்கும் போது.. *****

    கட கடவென இதயம் முன்னில்… வெளினடிபு செய்யுதம்மா…. *****

    பேசாத உதடு,துடிக்காத இதயம். உன்னாலே என் ஜீவன் ஏங்குதே….. ****

    தோடு தொடுவேன விரல்கள் எல்லாம்.. உன்னைப் பார்த்து சொல்லும் போது… ****

    தடா தடவென உயிரின் ஓசை .. தயக்கத்தோடு நடுங்குதம்மா……. ****

    தாயோடு பிறந்தே,உன்னோடு வளந்தேன்.. நீ கொஞ்சும் நாய் குட்டி நானடி….

    Related Posts Plugin for WordPress, Blogger...
    2 Comments