Archives
- August 2021
- May 2021
- January 2021
- December 2020
- November 2020
- October 2020
- July 2020
- July 2017
- October 2014
- June 2014
- March 2014
- January 2014
- October 2013
- August 2013
- March 2013
- February 2013
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- February 2012
- January 2012
- December 2011
- November 2011
- September 2011
Recent Articles
- 2nd wave COVID-19 Lockdown -Nalv distributed 40 Groceries bags to ayyampathi tribal people
- Second wave COVID-19 Lockdown Services-Nalvazhikatti Distributed 530+ food packets for destitute old age people on 16-June-2021
- 15-Jun-2021- Sankarankudi & Paramankadavu Settlement – Groceries & vegetables for 67 families – worth of Rs.70,000/-
- 13-Jun-2021- Nedukundram Settlement – Groceries & vegetables for 47 families – worth of Rs.43,000/-
- 8-Jun-2021- Kattupatti & Mavadappu Settlement – Groceries & vegetables for 110 families – worth of Rs.63,000/-
-
Nalvazhikatti Trust & Selvalayam Trust gave training for TNAU – Tamil Nadu Agricultural University for 5 days – 29-Mar-2021 to 2-Apr-2021
-
On 22-jan-2021, Nalvazhikatti Trust & STF both gave Groceries and vegetables to Gopalpathi Tribal village
-
Project update:1
Date: 01-Jan-2021
What we did: 500 Lemon & 500 Amla Saplings distributed to Tribal Settlement from Nalvazhikatti Trust
how much spend: Rs.1100/-
Sponsored by : Saplings sponsored by RoyalCare Hospital – UYIRIN SUVASAM TRUST (உயிரின் சுவாசம் ட்ரஸ்ட்) and Rupees 1100 given by Arunbalaji Selvaraj, Nalvazhikatti Trust.
மேலதிக தகவல்களுக்கும் நல்வழிகாட்டியுடன் தொடர்பில் இருப்பதற்கும்
Email – nalvazhikatti@gmail.com
WhatsApp / Call – 82965 42155
Website – www.nalvazhikatti.org
Mobile – +91 – 82965 42155 / 96000 85388To Sponsor:-
:- +91- 94866 56708
A/C Name – NALVAZHIKATTI TRUST
A/C Type – Current
A/C No – 510101000486123
Bank Name – Union Bank Of India
Branch – Pollachi
IFSC code – UBIN0901709
MICR Code – 641026073
நன்றி
-நல்வழிகாட்டி அறக்கட்டளை-
-
சேமிப்புப் பழக்கத்தை சிறுவயதில் இருந்தே பழக்குவோம் ! ! !
Guide the younger generation to bring the habit of saving…
Project update:1
Date: 21-Nov-2020
What we did: we have gifted Piggy banks to tribal children & Sponsored groceries for one family in Old Sarkarpathi Settlement
how much spend: Rs.1600/-
Sponsored by : Arunbalaji Selvaraj, Nalvazhikatti Trust
மேலதிக தகவல்களுக்கும் நல்வழிகாட்டியுடன் தொடர்பில் இருப்பதற்கும்
Email – nalvazhikatti@gmail.com
WhatsApp / Call – 82965 42155
Website – www.nalvazhikatti.org
Mobile – +91 – 82965 42155 / 96000 85388To Sponsor:-
:- +91- 94866 56708
Name of Beneficiary: NALVAZHIKATTI TRUST
IFSC Code: CORP0000170
MICR Code: 642017002
Account number: 017001601000184
Location of Beneficiary Bank: POLLACHI
Beneficiary Bank Name: CORPORATION BANK
Beneficiary Bank Branch: POLLACHI BRANCHநன்றி
-நல்வழிகாட்டி அறக்கட்டளை-
-
Nalvazhikatti Sponsored Groceries to Snehalayam – Home for mentally challenged orphanages, Pollachi
Snehalayam – Home for mentally challenged orphanages, Pollachi – Support them by serving them Contact for Snehalayam Wilson – 97508 03602, 94426 18741, 96298 50868
Project update:1
Date: 25-Aug-2020
What we did: Sponsored Groceries to Snehalayam – Home for mentally challenged orphanages, Pollachi
how much spend: Rs.5000/-
Sponsored by : Arun Prasad & family
மேலதிக தகவல்களுக்கும் நல்வழிகாட்டியுடன் தொடர்பில் இருப்பதற்கும்
Email – nalvazhikatti@gmail.com
WhatsApp / Call – 82965 42155
Website – www.nalvazhikatti.org
Mobile – +91 – 82965 42155 / 96000 85388To Sponsor:-
:- +91- 94866 56708
Name of Beneficiary: NALVAZHIKATTI TRUST
IFSC Code: CORP0000170
MICR Code: 642017002
Account number: 017001601000184
Location of Beneficiary Bank: POLLACHI
Beneficiary Bank Name: CORPORATION BANK
Beneficiary Bank Branch: POLLACHI BRANCHநன்றி
-நல்வழிகாட்டி அறக்கட்டளை-
-
You can do Social service; Social Responsibility
Cost free Session on You can do Social service; Social Responsibility by Mr.Arunbalaji Selvaraj & Mr.Manikandan K | YOU CAN DO IT | EDC | Sri Eshwar College of Engineering
Its Free session give to college students.
மேலதிக தகவல்களுக்கும் நல்வழிகாட்டியுடன் தொடர்பில் இருப்பதற்கும்
Email – nalvazhikatti@gmail.com
WhatsApp / Call – 82965 42155
Website – www.nalvazhikatti.org
Mobile – +91 – 82965 42155 / 96000 85388To Sponsor:-
:- +91- 94866 56708
Name of Beneficiary: NALVAZHIKATTI TRUST
IFSC Code: CORP0000170
MICR Code: 642017002
Account number: 017001601000184
Location of Beneficiary Bank: POLLACHI
Beneficiary Bank Name: CORPORATION BANK
Beneficiary Bank Branch: POLLACHI BRANCHநன்றி
-நல்வழிகாட்டி அறக்கட்டளை-
-
Even at last breath My Father had donated his eyes and gave vision to two people. He will ever live in this world and see us through his eyes. Let his Soul rest in peace.
-
கல்வி ஆராய்ச்சிகள் பகுதியில் மொழி கற்பித்தலுக்கான புதிய அணுகுமுறை..-பொள்ளாச்சி நசன்
http://www.naalorunool.com/kal/arachi/innov/innvo89-u8.htm
மேலுள்ள இணைப்பில் கல்வி ஆராய்ச்சிகள் பகுதியில் மொழி கற்பித்தலுக்கான
புதிய அணுகுமுறைக்கான படியானது. இது பொள்ளாச்சி நசன் அவர்களால்
தரப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து படித்துப் பார்த்து உங்கள் கருத்தை
எழுதவும்.பொள்ளாச்சி நசன்
இப்படிக்கு,
பொள்ளாச்சி அருண்பாலாஜி,
9600085388 -
அரசு Volvo-வில் ஒரு பயணம் !
காலை 9.30 மணி என் இரு சக்கர வாகனத்தை பழுதுப்பார்க்க கடையில் கொடுக்க சென்று இருந்தேன். அவர்கள் மாலை 5.30 மணிக்கு வர சொன்னார்கள். நானும் சரி அலுவலகம் செல்லலாம் என்று அருகில் இருக்கும் பஸ் நிலையத்தை தேடினேன். சற்று தூரம் நடக்க வேண்டியது ஆயிற்று. ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு கிண்டி திரு.வி.க பேருந்து நிறுத்தம் அடைந்தேன்.
எல்லோருக்கும் தெரியும் கிண்டி திரு.வி.க பேருந்து நிறுத்தம் ரோட்டிலேயே அமைந்து இருக்கும். திருவிழா கூட்டம் போல் மகக்ள் நிற்கிறார்கள். நான் ஓம்.எம்.ஆர் (OMR) என்று அழைக்
கப்படும் பழைய மால்லபுரம் சாலையில் இருக்கும் ஆர்.ஆர்.ஈ (RRE) பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் என் அலுவலகம் செல்ல வேண்டும். ஆனால் கிண்டி திரு.வி.க பேருந்து நிறுத்தத்தில் அதிக மக்கள் கூட்டம் நிலவுகிறது. ”நான் இன்று போய் சேர்ந்தாற்போல் தான் ! ” என்று நினைக்கையில் பஸ்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அதே நேரத்தில் அதிக மக்கள் நிரம்பி வழிந்து சென்றும் இருக்கிறார்கள்.
நான் மனதில் “ஓ இன்று நாம் அலுவலகத்திற்கு மட்டம் தான் போல என்று அப்போது ஆபத்துபாண்டவனாக அரசின் மாநகர போக்குவரத்து கழக குளிர்சாதன பேருந்து என் அருகில் வந்து நின்று தானியிங்கி கதவை ஓட்டுநர் திறக்க குளிர்சாதன காற்று என் முகத்தில் தென்றல் வீசியது நான் என்னை அறியாமலே ஏறிவிட்டேன் அமர்வதற்கு இடம் இல்லை எனினும் நிற்பதற்கு இடம் இருந்தது. எங்கேயோ பாட்டு பாடுவது போல் இருந்தது. அது குளிர்சாதன Volvo பேருந்தில் இருந்து தான் அந்த பாட்டு மிகவும் அருமையான இசை. மெல்லிய சத்தத்தில் ஒளிர்கிறது. அமர்ந்து இருப்பவர்கள் எல்லோரும் ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார்கள். தியானமா என்று கேட்கிறீர்களா, ஆம் ஆழ்ந்த உறக்கத்தை தான் நான் அவ்வாறு கூறினேன். என்ன பேருந்தில் உறங்குவதால் குறட்டை சத்தம் இல்லை. குளிர் 18oC வெப்பநிலை, இனிமையான இசை வெளியே வரும் இரைச்சல் கேட்காதவாரு கண்ணாடி அமைக்கப்பட்டு உள்ளது. நடத்துனர் என் அருகே வந்து பயணச்சீட்டு கேட்டார். எங்கே போகணும்? நான் அதற்கு (RRE) என்று கூறினேன். நான் 50 ரூபாய் கொடுத்தேன். மனதில் இன்னும் கேட்பார் போல என்று நினைக்கும் கனத்தில் ரூபாய் 25 யை திருப்பி தந்தார். பொதுவில் ஆர்.ஆர்.ஈ நிறுத்தத்தில் விரைவு பேருந்தோ, மஞ்சள் பலகை, பச்சைப் பலகை, LSS. (எல்.எஸ்.எஸ்) பேருந்து நிற்காது. இவை அனைத்தும் மூட்டைக்காரன் சாவடி, P.T.C மேட்டுக்குப்பம் ஆகிய நிறுத்த்தில் தான் நிற்கும். நான் இதில் ஏதேனும் ஒரு நிறுத்தத்தில் இரங்கி பின்பு அலுவலகத்தில் நடப்பேன்.
சற்று தூரம் சென்ற உடன் எனக்கு அமர்வதற்கு இருக்கை கிடைத்தது. ஒரு வழியாக நிம்மதியாக அமர்ந்தேன். கண்ணாடி வழியாக பார்த்தால் சத்தம் இல்லாத படத்தை காண்பது போல் இருந்தது. எனக்கு பேருந்து நகர்வதோ, குழியில் இறங்கி ஏறுவதோ தெரியவே இல்லை. நான் விமானத்தில் சென்று உள்ளேன். அதில் கூட ஏறும் போதும், இறங்கும் போதும் சில அதிர்வுகளை உணர முடியும். இந்த அரசு Volvo பேருந்து குண்டும் குழியுமாக உள்ள தரமணி சாலையில் செல்லும் போது கூட எனக்கு அதிர்வுகள் தெரியவே இல்லை. எனக்கும் தியானம் செய்ய வேண்டும் போல இருக்கையில் என்னை அறியாமலே என் கண்கள் மூடின. நானும் சாமியாட வேண்டியது ஆயிற்று அன்று தான் நான் சொகுசு என்றால் என்ன என்பதை உணர்ந்தேன்.
வழக்கத்திற்கு மாறாக பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் ஐடி நிறுவனங்களின் முகப்பில் நின்றது. நான் சென்ற பேருந்து கோயம்பேட்டில் இருந்து, கேளம்பாக்கம் செல்லும் பேருந்து அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் ஐடி துறை சார்ந்தவர்கள். எல்லோர் உடைய கழுத்திலும் மாட்டுக்கு மணிகட்டுவது போல அடையாள அட்டையை அணிந்து இருந்தார்கள்.
அப்போது தான் புரிந்தது இது தானியை (ஆட்டோவை) போன்றது என்று. உங்களுக்கு தெரியும் OMR-ல் தான் அனைத்து ஐகூ நிறுவனங்களும் இருக்கின்றன. நான் கவ
னித்த வரையில் இதில் பயணம் செய்பவர்கள் எல்லோரும் ஐடியில் வேலை செய்பவர்கள் ஏன்? நானே ஐடி துறையில் தானே வேலை செய்கிறேன்.
நான் ரோட்டை கூர்ந்து கவனித்தேன். OMR-ல் நிறை அரசு Volvo குளிர்சாதன பேருந்து தான் அதிகம் காணப்பட்டது. நான் வழக்கமாக இருசக்கர வாகனத்தில் வருவதால் எனக்கு இது தெரியவில்லை. இந்த மாதிரி சொகுசு பயணம் யாருக்கு கிடைக்கும். அதுவும் இந்த வெயிலில் இனிமையான இசை, நடத்துனரே நேரில் வந்து பயணச்சீட்டு கொடுப்பார் (மத்த அரசு மாநகர பேருந்தில் அது கிடையாது நாம்தான் நடத்துனர் இருக்கைக்கு சென்று வாங்க வேண்டும்) நினைத்து இடத்தில் இறங்கி கொள்ளலாம். மக்கள் நெரிசல் இல்லை. மணிக்கு சென்று விடாலம். சொகுசு பயணம். விலையே 25 ரூபாய் மட்டும். நான் இதை எல்லாம் நினைக்கையிலேயே என் அலுவல
கம் அருகில் வர நான் நடத்துனர் இடம் செல்ல அவர் என் அலுவலக முகப்பிலேயே என்னை இறக்கி விட்டார். அட* தினமும் நாம் இதிலேயே வரலாம் போல் இருக்கே என்று தோன்றியது.
ஆனால் இந்த பயணம் நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்கு கீழே வாழ் மக்களுக்கு அது தினமும் பயணம் செய்ய சாத்தியம் இல்லாத ஒன்று என்ன. ஏதோ ஒரு நாள் ஆசைக்காக சென்று பார்க்கலாம் வெறும் 25 ரூ தான். நானும் அதை தான் செய்தேன். தினமும் 25 ரூ கொடுத்து வர இயலாத சூழல் மனம் சொகுசுக்கு ஆசைபடுகிறது. ஆனால் பேருந்து நிறுத்தத்தில் 5 ரூ கூடுதலே அதே தொலைவிற்கு நாம் கொண்டு செல்ல பேருந்து இருக்கும். என்றுமே சொகுசாய் வாழ நாம் ஏழை எளிய மக்களால் முடியாது என்றாவது ஒரு நாள் முடியும். இப்படி நானும் ஒரு நாள் வாழ்ந்து பார்த்தேன். அதை பதிவு செய்யவும் ஆசைப்பட்டேன் இதோ உங்கள் முன்…
நீங்களும் ஒரு நாள் அரசு Volvo-வில் சென்று தான் பாருங்களேன் என்னை போல் அனுவித்து கூறுங்களேன்.
நன்றி,
பொள்ளாச்சி அருண்பாலாஜி , -
இரண்டாம் நிலை குழந்தை பருவம்
ஒரு அந்தி மாலை பொழுதில் சொந்த ஊருக்கு செல்லலாம் என்று பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நின்று கொண்டு இருந்தேன். அது வேளச்சேரி சோதனை சாவடியும் (செக்போஸ்ட்) மடுவாங்கரை பாலத்தையும் இணைக்கும் குறுகிய பாதை (40 அடி பாதை) அதில் என்றும் இல்லாதவாறு ஒரே பேருந்து நெறிசல் ஒலி சத்தம் என் காதுகளை கிழித்துக் கொண்டு இருந்தது.
அப்போது ஒருவர் ஒரு பொக்கைவாய் கிழவியை கையை பிடித்து கூட்டி கொண்டு வந்தார்.அந்த கிழவியும் மிகவும் பொறுமையாக நகர்ந்து கொண்டு வந்தார். அதை பார்த்தவாறே இருந்தேன். அப்போது அந்த போக்குவரத்து நெரிசலிலும் ஒரு கில்லாடி பேருந்து நிறுத்தத்திற்கு ஓடி வந்தார்.
அந்த பேருந்தில் பயணிகள் நிரம்பி வழிந்தனர். நிறுத்தத்தில் இருந்து பயணிகளால் ஏற முடியவில்லை. அப்போது மணி 6.40 அல்லது 6.50 இருக்கும் நான் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கே நின்று இருந்தவர்கள் எல்லாம் கடந்த 1 மணி நேரமாக நிற்பதாக சொல்ல நான் கண்டிப்பாக முன்பதிவு செய்த பேருந்தை பிடிக்க முடியாமல் போகும் என்று எண்ணிக் கொண்டேன். என்னிடம் அவ்வளவாக சுமை ஒன்றும் இல்லை. இருந்தும் என்னால் அந்த பேருந்திலும் ஏற முடியவில்லை. அவ்வளவு மக்கள் கூட்டம் பேருந்தில்.
இதற்கிடையில் அந்த பொக்கைவாய் கிழவியை கூட்டி வந்தவர், “அம்மா நான் வேணும்னா ஆட்டோ எடுக்கட்டா? என்று கேட்க அதற்கு அந்த கிழவி “வேண்டாம்பா காசு செலவாகும் நம்ம பஸ்ஸிலியே போலாம் பா! என்ன? என்னாலதான் ஏற முடியாது”
எனக்கு சமீபத்தில் இறந்த என் பாட்டியின் நினைவு தொற்றிக் கொண்டது. அந்த வயதான மூதாட்டியை பார்க்கும் போது இது எப்படி இந்த நெரிசலில் ஏற போகுது என்று தோன்றியது. என்னால் அந்த மூதாட்டியின் துறுதுறுவென இருக்கும்
செயல்களை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அந்த மூதாட்டிக்கு ஒரு 70லிருந்து 78 வயதிற்குள் இருக்கும். என்னை மிகவும் ஈர்த்த விஷயம் அந்த மூதாட்டி நிற்காமல் சென்ற பேருந்தை நோக்கி ஓட முயற்சி செய்தது தான். என்னை அறியாமல்
என் கண்களில் தண்ணீர் பெருக்கெடுத்தது. அதை துடைத்துக் கொண்டு பேருந்தை நோக்கினேன். மணி 7.30 ஆயிற்று. அப்பவும் எல்லா பேருந்தும் ஒரு மனிதர் கூட ஏறமுடியாமல் சென்றது. கடைசியாக நான் ஆட்டோவை பிடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு ஆட்டோ ஓட்டுநரை கேட்டேன். “அண்ணா கோயம்பேடு போலாமா?” என்று கேட்க, அதற்கு அவர் “இல்ல தம்பி ஒரே டிராபிக்கா இருக்கும் பா” என்று கூறினார்.அந்த ஒரு வழிப்பாதை “ஒரு வழியாக”இருந்தது. மணி 7.40 ஆயிற்று. அதே இடத்தில் நானும் அந்த மூதாட்டியும் நிற்கிறோம். அந்த மூதாட்டி அவர் மகனின் கையை விடவே இல்லை. கடைசி வரை நானும் இது அவனின் கை விடும் விடும் என்று எண்ணி நின்று கொண்டு
இருந்தேன். அப்போதும் நாங்களும் (மூதாட்டியும் நானும்) பேருந்துகளில் ஏறும் முயற்சியை கைவிடாமல் முயன்றோம். இறுதியாக ஒரு பேருந்தில் நான் ஏற முயன்ற போது அந்த மூதாட்டியும் வந்தாள்… அப்போது படிக்கட்டில் பயணம் செய்யும்
சில இளைஞர்களை பார்த்து “வழிவிடுங்கள் வழிவிடுங்கள் இல்லைன்னா கீழே இறங்கி ஏறுங்கப்பா” என்று கூறினேன். ஆனால் ஒருவர் கூட வழிவிடவில்லை. நான் ஏறிய பின் திரும்பி அந்த மூதாட்டியை பார்த்தேன் . படியில் ஏற முயற்சி செய்து கொண்டு இருந்தது. இதை அந்த படியில் பயணம் செய்யும் இளைஞர்களும் பார்த்தபடி நின்றனர். என் மனம் குமுறியது. நான் அந்த மூதாட்டியின் கையைப் பிடித்தேன். அப்போது எதிர்பார்க்காத விதத்தில் பேருந்து நகர்ந்தது. ஒருவர் கூட நடத்துனரையோ, ஓட்டுநரையோ தடுக்கவில்லை. சத்தமும் எழுப்பவில்லை. நான் விழபோகிவிட்டேன். எனினும் சுதாகரித்துக் கொண்டு அந்த மூதாட்டியை மேலே ஏற்ற முயற்சி செய்ய அவளின் மகனும் உதவினார். ஒரு வழியாக மூவரும் மேலே வந்தோம்.
அப்போது அந்த மூதாட்டி அமர இடம் தேடியது. அமர்ந்திருந்த அனைவரும் முகத்தை திருப்பிக் கொண்டனர். எனக்கு அந்த கூட்டத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. கோபம் வந்தது. அதை அடக்கிக் கொண்டு, ஒரு பெண் மாற்று திறனாளி / முதியோர் அமரும் இடத்தில் அமர்ந்து இருந்தார். நான் அவர்களிடம் “ப்ளீஸ், இந்த பாட்டிக்கு இடம் கொடுங்க என்று சொல்ல அவர்களும் சலித்துக் கொண்டு எழ.. அந்த மூதாட்டி இரு கைகளையும் கூப்பி என்னைப் பார்த்தது. எனக்கு அழுகை வந்தது. என் மனதில் “இது என் கடமை” என்று கூறிக் கொண்டு பயணச் சீட்டு வாங்க போய்விட்டேன்.
கோயம்பேடும் வந்தது. பேருந்தில் இருந்து இறங்கிவிட்டேன். ஆனால் மனதில் ஒரே சலசலப்பு. “எப்படி! அந்த பொக்கைவாய் கிழவி எப்படி வீட்டிற்கு போகும்”. இந்த போக்குவரத்து நெரிசலில் எப்படி சாலையைக் கடக்கும். இப்படியாக வந்து கொண்டே இருந்தது எண்ணம். மறுபுறம் இரண்டாம் நிலை குழந்தை பருவத்தை நினைத்து மகிழ்வதா , பயப்படுவதா? அல்லது வருத்தப்படுவதா என்று தோன்றியது. இந்த நகரத்தில் (நரகத்தில்) எப்படி இந்த மூத்த குடிமக்கள் வாழமுடியும்.
“கத்தார்சிங், பகத்சிங், அப்பு, சிறுகண்டன், அபுபக்கர், குஞ்ஞம்பு, வாஞ்சிநாதன் போன்ற இளைஞர்கள் பிறந்த இந்த இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு உதவி செய்ய அந்த பேருந்தில் யாரும் முன்வரவில்லையே என்று தோன்றியது”.
நான் எல்லோரையும் பொத்தாம்பொதுவாக சொல்லவில்லை. இருந்தாலும் என்னால் மூத்த குடிமக்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை பார்க்கையில் இளைய சமூகம் யாவும் அந்த குழந்தை போன்றவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்பது என் சிரம் தாழ்ந்த வேண்டுகோள்.
‘எங்கேயாவது பேருந்தில் முப்பனோ , மூதாட்டியோ நின்று கொண்டிருந்தால் தயவு செய்து அமர இடம் கொடுங்கள் மாறாக தலையை திருப்பிக் கொள்ளாதீர்கள். நாம் தான் நம் மூத்த குடியை பாதுகாத்து அரவணைக்க வேண்டும். இவர்களின் நிலைமை நீஙகள் நினைப்பது போல் சாதாரணம் அல்ல. நீங்கள் எங்கேயாவது மூத்தகுடி மக்களை பாருங்கள் அவர்களின் கஷ்டம் அப்பொழுது உங்களுக்கு தெரியும். பின்பு நீங்களாகவே உதவி செய்வீர்கள்.
அவர்களும் நம் அம்மா அப்பாதான் ! !
– பொள்ளாச்சி அருண்பாலாஜி