• மழலையர் பாடலா, ஒப்பாரிப் பாடலா?

    ringa ringa roses..

    ringa ringa roses..

    மழலையர் பாடலா, ஒப்பாரிப் பாடலா?எங்கள் வீட்டிற்கு எதிரில், பிரபலமான மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. தினமும் காலை 10.00 மணி அளவில், மழலைச் செல்வங்கள் கோரசாக, ஏ.பி.சி.டி., சொல்வதும், ஆங்கிலப் பாடல்களை பாடுவதும் வாடிக்கை. அவற்றுள், “ரிங்கா, ரிங்கா ரோசஸ்’ என்ற பாடலை குழந்தைகள் அடிக்கடி பாடுவதால், அது எங்கள் தெருவுக்கே மனப்பாடமாகி விட்டது. ஆனால், அந்தப் பாடலின் பொருள், எனக்குப் புரியவில்லை. அது, என்னதான் சொல்ல வருகிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கிய எனக்கு, பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

    தற்செயலாக நான் படித்த, “மிஸ்டரி ஆப் ஹிஸ்டரி’ என்ற நூலில் கண்டிருந்த விஷயம் இது தான்…
    கி.பி., 18ம் நூற்றாண்டுத் துவக்கத்தில், இங்கிலாந்து மக்களை மிகவும் அச்சுறுத்தியது கொள்ளை நோயான, “பிளேக்!’ அந்த நோய் கண்டவர்களின்

    முதல் அறிகுறி, உடம்பில் வட்ட வட்டமாக, சிவந்து காணப்படும் தடிப்புகள். அதாவது, “ரிங்கா ரிங்கா ரேஷஸ்’ (வட்ட வட்டமான தடிப்புகள்) அடுத்த அறிகுறி, “பாக்கட் புல் ஆப் போசீஸ்’ அதாவது, இந்த நோய் கண்டவர்கள், நம்ம ஊர்த் துளசி போல, இங்கிலாந்தில் பூக்கும், நோய்களை விரட்டுவதாக நம்பப்படும், “போஸி’ என்ற கிருமி நாசினிப் பூக்களை, தங்களது சட்டைப் பைகளில் வைத்துக் கொள்வராம், “பிளேக்’ நோயை விரட்டும் என்ற நம்பிக்கையோடு!

    மூன்றாவது அறிகுறி, “அ டிஷ்யூ… அ டிஷ்யூ…’ ஏதாவது புரிகிறதா? அட… தும்மல் ஒலிங்க! அந்தப் பூக்களை வைத்தும், நோயின் தாக்கம் குறையாமல், ஒருவருக்குத் தொடர்ந்து தும்மல் வந்ததென்றால், “வி ஆல் பால் டவுன்!’ இப்போது புரிந்திருக்குமே… ஆம்! அவர் விண்ணகத்திற்கு, “டிக்கட்’ வாங்கியாயிற்று என்பது பொருள்.

    இனி, அந்த நபர் இறந்து விடுவார் என்று, சோகத்தோடு ஒப்பாரியாகப் பாடப்படும், ஆங்கிலேயே நாட்டுப்புற இழவுப் பாடலை, அது ஆங்கிலத்தில் பாடப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காகவே, கிட்டத்தட்ட, 200 ஆண்டுகளுக்கும் மேலாக, நம் இந்திய மழலையரிடம், பொருள் புரியாமல் போதிப்பதும், அவர்களை பாடச் சொல்லி ரசிப்பதும், முட்டாள்தனமில்லையா?

    வெளிநாடுகளில் எங்குமே குழந்தைகளால் பாடப் பெறாத இந்த ஒப்பாரிக்கு, எப்போது ஓய்வு? கல்வியாளர்கள் கண் திறப்பரா!

    — சங்கமித்ரா நாகராஜன், கோவை.

     

    russia-ring-a-ring-o-roses

    russia-ring-a-ring-o-roses

    Common British versions include:

    Ring-a-ring o’ roses,
    A pocket full of posies,
    A-tishoo! A-tishoo!
    We all fall down.

    Common American versions include:

    Ring-a-round a rosie,
    A pocket full of posies,
    Ashes! Ashes!
    We all fall down.

    The last two lines are sometimes varied to

    Hush! Hush! Hush! Hush!
    We’ve all tumbled down.

    http://en.wikipedia.org/wiki/Ring_a_Ring_o%27_Roses

    No Comments
  • ராஜா ! மஹாராஜா ! !

    ராஜா ! மஹாராஜா ! !

    ஒரு நாள் மஹாராஜா அரசவையில் வீற்று இருக்கும் போது

    ஒருபெரிய சந்தேகம் வந்தது. அதை அங்கு இருக்கும் எல்லோரிடமும்கேட்டு

    கொண்டு இருந்தார். அந்த சந்தேகம் என்னவென்றால்

    இந்த உலகத்தை விட பெரியது எது?

    இந்த உயிரை விட பெரியது எது?

    இந்த கடலை விட பெரியது எது? என்று தான் அவரது சந்தேகம்.

    அவையில் இருந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் எழுந்து இதுநம்

    தலைமை அமைச்சருக்கு தான் தெரியும் என்று கூற அவரோ “சற்று

    அவகாசம் தாருங்கள் என்று கூறினார். நாட்கள் கடந்தன.எல்லோரும்

    அதை மறக்க மன்னனின் சேவகன் ஒருவன் “ அரசேநீங்க அன்றைக்கு கேட்ட

    கேள்விக்கு இந்த தலைமை அமைச்சர்இன்றைய வரை பதில் சொல்லாமல்

    ஏமாற்றி வருகிறார் என்று.

    “இதை கேட்ட அரசர் கோபம் கொண்டு அரசவைக்கு சென்றுதலைமை

    அமைச்சருக்காக காத்து இருந்தார்.

    அமைச்சர் வந்த உடன் “மஹாராஜா என்ன! இன்று சற்று கோபமாகஉள்ளீர்கள்

    என்று கேட்க அதற்கு அவர் “அமைச்சரே ! நீர் என்னஎன்னை ஏமாற்றி

    கொண்டு இருக்கிரிரா ?” இல்லை மஹாராஜா ஏன்?

    திடீர் என்று உங்களுக்கு இப்படி தோன்றியது.

    “நான் கேட்டகேள்விக்கு பதில் எங்கே?” நாளை காலையில் எனக்கு

    பதில் வந்துஆக வேண்டும் என்று கூறி எழுந்து சென்று விட்டார்.

    தலைமை அமைச்சர் வீட்டிற்கு சென்று சோகமாக உட்கார்ந்துஇருந்தார்.

    நான் என்ன செய்ய முடியும்.இந்த உலகை விட ,உயிரைவிட, கடலை

    விட பெரியது எது?என்று எவ்வாறு எனக்கு தெரியும்.

    அவர் மனைவியிடம் இதை சொல்லி வருத்தப்பட்டார். அவர்மனைவி “ நாம்

    மஹாராஜா வின் கோபத்திற்கு வீணாக ஆளாகபோகிறோம்.” என்று கூறினார்,

    இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த அவர்களின் மகன்“ராஜா”அங்கு

    வந்தான் . என்ன ஆகிவிட்டது இப்போ,மஹாராஜாவிற்கு உயிரை விட ,

    கடலை விட , உலகத்தை விட, எதுபெரியது என்று தெரிய வேண்டும் ,

    அவ்வளவு தானே நான் வந்துஅவருக்கு சொல்கிறேன் என்று ராஜா கூற

    “மகனே ராஜா! உன் அப்பாதலைமை அமைச்சர் அவருக்கே தெரியாதது

    உனக்கு எப்படி கண்ணாதெரியும் ?” என்று அம்மா கேட்டாள்.

    அப்பா, அம்மா என்னை நம்பி என்னிடம் விடுங்கள் , என்னை

    நாளைஅரசவைக்கு கூட்டி செல்லுங்கள் என்று சொன்னான் ராஜா .

    ஒருவழியாக இருவரும் சமாதானமாகி ஒப்புக் கொண்டனர்.அடுத்த

    நாள்காலை அரசவையில் ,

    “மஹாராஜா வருகிறார்” என்று கூற காவலாளி. எல்லோரும்ஆவலாக

    இருந்தார்கள். அப்படி என்ன தான் இந்த தலைமைஅமைச்சர் சொல்வார்

    என்று அதுவும் இவர் தன் மகனையும்மனைவியையும் அழைத்து வந்து

    இருக்கிறாரே! சிலர் ”எனக்குதெரியாது !” என்று கூறி மன்னிப்பு கேட்க தான் ,

    இவர் அழைத்துவந்தாக சொன்னார்கள். அரசர் வந்தாயிற்று . அரசவை கூடியது.

    தலைமை அமைச்சர் : மஹாராஜா உங்களின் கேள்விக்கு என்அருமை

    மகன் ராஜா பதில் அளிப்பான்.

    மஹாராஜா : என்ன உன் மகனா?

    தலைமை அமைச்சர் : ஆம்…

    மஹாராஜா : சரி வரச் சொல்

    ராஜா : உங்களின் கேள்விகள் என்ன மஹாராஜா ?

    மஹாராஜா : என் கேள்விகள் இந்த உலகை விட,உயிரைவிட,கடலை

    விட பெரியது என்ன? என்பது தான்.

    ராஜா : மிகவும் சுலபமானது மஹாராஜா?

    மஹாராஜா : எப்படி?

    ராஜா : உலகை விட பெரியது

    காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்

    ஞாலத்தின் மாணப் பெரிது .

    விளக்கம் :தக்க காலத்தில் ஒருவன் செய்த உதவி,சிறியதாகஇருந்தாலும்,

    அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தை விட மிகப்பெரியதாகும்.

    ராஜா : உயிரை விட பெரியது ?

    ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

    உயிரினும் ஒம்பப் படும்.

    விளக்கம் : ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் அந்தஒழுக்கமே

    உயிரினும் மேலானதாகப் போற்றப்படும்.

    ராஜா : கடலை விட பெரியது ?

     

    “ பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

    நன்மை கடலிற் பெரியது ”

    விளக்கம்: பயனை எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவியாகிய,

    அன்புடைமையை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை

    கடலினும் மிகப் பெரியதாகும்.

     

    இப்போது உங்களின் கேள்விகளுக்கு பதில் கிடைத்ததா என்று

    ராஜாமஹாராஜாவிடம் கேட்க அவர் தலை குனிந்து நின்றார்.அந்தஅவையே

    ராஜாவின் அறிவு கூர்மையை பார்த்து வியந்து நின்றது.

    இந்த கதையில் இருந்து நாம் கற்றுக் கொண்டது,என்னவென்றால் திருக்குறளில் அனைத்திற்கும்விடை உண்டு.பின்பு பிறரிடம் திறமையையேபார்க்க வேண்டும்வயதை அல்ல

    -பொள்ளாச்சி அருண்பாலாஜி

    1 Comment
  • கல்வி ஆராய்ச்சிகள் பகுதியில் மொழி கற்பித்தலுக்கான புதிய அணுகுமுறை..-பொள்ளாச்சி நசன்

    http://www.naalorunool.com/kal/arachi/innov/innvo89-u8.htm

    மேலுள்ள இணைப்பில் கல்வி ஆராய்ச்சிகள் பகுதியில் மொழி கற்பித்தலுக்கான
    புதிய அணுகுமுறைக்கான படியானது. இது பொள்ளாச்சி நசன் அவர்களால்
    தரப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து படித்துப் பார்த்து உங்கள் கருத்தை
    எழுதவும்.

    பொள்ளாச்சி நசன்

    இப்படிக்கு,
    பொள்ளாச்சி அருண்பாலாஜி,
    9600085388

    4 Comments
  • கதை சொல்லி – அ. வெண்ணிலா (A. Vennila)

    “என் உடலை விதைத்திருக்கிறார்கள்
    என் மார்புக் காம்புகள் நீரூற்ற‌
    பூச்செடிகளும் மரங்களும்
    துளிர் வி ட்டு வளர்ந்து
    விருட்சமாயிருந்தன.
    விளையாட
    சிட்டுக் குருவிகளும் புறாக்களும்
    போட்டியிட்டன.

    உழுதார்கள் விதைத்தார்கள்
    அறுவடை செய்தார்கள்.
    காலாதீதத்தில்
    என் உடல்
    நல்ல விளைநிலமாயிருந்தது.
    வண்ணத்துப் பூச்சிகளும்
    தேடி வரும் ஆவலில்
    பூச்செடிகளுக்காய் ஏங்கியிருந்தேன்.
    முட்களுக்கும் சுள்ளிகளுக்கும்
    அதிக தேவையிருந்ததால்
    என் உடலில் அதிகம் விதைத்தார்கள்.

    என் பால் வாசம் நுகர்ந்து
    வேலி வரை வந்து
    உள் நுழைய முடியாமல்
    தவித்துக் கொண்டிருக்கும்
    வண்ணத்துப் பூச்சிகளுக்காகவும்
    தட்டான்களுக்காகவும்
    என் உடலை சுருட்டிக் கொண்டு
    தொட்டிச் செடி பூவாக்கி
    காத்திருக்கிறேன்.
    சூரிய‌னுக்கு வெகு கீழே.”

    – அ.வெண்ணிலா.

    கதை சொல்லிக்காக சென்னையிலிருந்து வந்தவாசி செல்வதற்கு வெளிக்கிட மதியத்தை தாண்டிவிட்டிருந்தது. கவிஞர் அ.வெண்ணிலா பின்னேரம் நான்கு முப்பது மணிக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார். சென்னையிலிருந்து வந்தவாசிக்கு இரண்டரை மணித்தியாளத்திற்குள் சென்று விடலாம் அல்லது அதிகபட்சம் மூன்று மணித்தியாளம். பேருந்தின் சன்னலில் வாய் பார்த்து வந்து கொண்டிருந்தேன்.வேடிக்கைப் பார்ப்பது சிறுவயதில் இருந்தே அறியாமல் என்னுள் தொற்றிக் கொண்ட விடயம். ‘ஒருவேலைக்கு அனுப்பினா கப்பல் பார்க்க விட்ட சேவகன் மாதிரி இல்லாம கெதியாண்டு வீட்டுக்கு வந்து சேர்’என்னும் வசவோடே வீட்டில் வளர்ந்தேன். காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இன்னும் தீர்ந்தபாடில்லை. காணக் காண கிடைக்கும் போதை திகட்டுவதில்லை. நான‌ற்ற‌ நிலையில் சிந்திப்ப‌த‌ற்கும் காட்சி வெளி தேவையாக‌ இருக்கிற‌து

    சாலையின் இருமங்கிலும் ஆச்சிரியப் பட வைத்தவை கிழடு தட்டிப் போன மரங்கள். பழமையான ஊர் என்பதற்கு சாட்சிகளாக நின்று கொண்டிருந்தன. அனேகமான மரங்களில் பட்டைகள் கிழவனின் முகச்சுருக்கங்கள் போல் மாறிவிட்டிருந்தது. சில மரங்களில் தண்டுகள் பொக்கை வாய்களாய் உள்வற்றிப்போய் சிறு தடி போல் நின்று பெரும் கிளைகளை தாங்கிக் கொண்டு நின்றது. பச்சை நிற இலைகள்இன்னும் பசுமையான வசந்தங்களைப் காணப் போவதை சொல்லிக் கொண்டிருந்தது. முன்னர் அங்கங்கே வெட்டி விடப்பட்ட கிளைகள் மரத்தில் கண்களைப் போல மாறியிருந்தது. பேருந்து செல்லும் வழிகளிலெல்லாம் பழமையான கோவில்களை காண முடிந்தது. ஊரின் பெயர்ப் பலகைகளும் மிக விசித்திரமான அழகான பெயர்களைத் தாங்கி நின்றது.

    வந்தவாசி பேருந்து நிலையத்தில் இறங்கி சற்றுத் தொலைவில் உள்ள அம்மையப்பட்டு என்னும் ஊரில் உள்ள பாடகசாலைக்கு கொஞ்சம் தள்ளி உள்ள பாதையில் இருக்கிறது அ.வெண்ணிலாவின் வீடு. வெண்ணிலாவின் வீட்டின் பெயர் அகநி இல்லம். அகநி என்பது மூன்று குட்டி இளவரசிகளின் பெயர்களுடைய முதல் எழுத்து. அ = அன்புபாரதி, க = கவின் மொழி, நி = நிலாபாரதி. இதில் அன்புபாரதியும், நிலாபாரதியும் இரட்டையர்கள். வெண்ணிலாவின் கணவரும் கவிஞர். அம்மா அப்பா இருவரும் கவிஞர்களாக இருப்பாதல் குழந்தைகளுக்கும் கவிதை மேல் நாட்டம் இயல்பாக இருக்கிறது. மூவருக்கும் வாழ்க்கை தேர்வு மருந்துவர், ஆட்சியர் என பட்டியலிட்டாலும் தவறாமல் ஒரு மாற்றுத் தேர்வாக கவிஞர் ஆவதையும் குறிக்கோளாக வைத்துள்ளார்கள். கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, பொது அறிவுப்போட்டியென பரிசுகளை வென்று வரத் தொடங்கி விட்டார்கள்.

    தேனீர் உபசரிப்புடன் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டபின் கதைகளை பதிவு செய்யத்தொடங்கினோம். வெண்ணிலா கதை சொன்ன விதம் நிறம்ப அழகு.

    அவர் குரலின் இனிமை கதைகளோடு ஒட்டிக் கொண்டது. கதைகளைச் சொல்லும் போது அவர் குரலில் ஏற்ற இறக்கங்கள் கதாபாத்திரங்களின் ஒத்த தன்மையோடு மாறிவிடும். சில நேரங்களில் கதாபாத்திரங்களை போல் நடித்துக் காண்பித்து கதைகள் சொல்கிறார். தாயையும் மகளையும் பற்றி வரும் சிறுகதையில் அவரே தாயாகவும் மகளாகவும் உருமாறிக் கொண்டிருந்தார். ‘மலம்’ கதையில் வரும் துன்பியல் நகைச்சுவையை தன் மனதில் உள்ளதை வார்த்தைகளில் வழி கடத்துவது அவ்வளவு எளிதல்ல. பாதிரியாரின் நிலையை எளிதாக கற்பனை செய்ய முடிந்திருந்தது அவர் குரலில். தன்னுடைய சிறுகதையைச் சொல்லும் போது ‘அவ்வளவு பட்டாம்பூச்சி’ என்கிற பொழுது அவர் கண்களும் மூடியேஇருந்தது.

     

    “காக்கா க‌தை
    குட்டி இள‌வர‌சி க‌தை
    தேவதை க‌தை என‌
    சொல்லி ம‌கிழ்ந்த‌
    பேச்சுக்க‌ளைப் ப‌ரிமாறிய‌
    இர‌வொன்றில்
    ந‌ம்மால்
    குழ‌ந்தைக‌ளைப் போல்
    க‌ட்டிய‌ணைத்து
    உற‌ங்க‌ முடிந்த‌து”

    – அ.வெண்ணிலா

    அடுத்து தொடங்கியது மழலைகளின் கதை சொல்லல். அவர்கள் கதைகளுக்குள் நுழைய அவர்களின் வயதினராலேயே முடியும். அதியுயர்ந்த கற்பனைகளுக்கெல்லாம் இடம் கொடுக்கும் வயது அது. அவர்களின் நகைச்சுவை உணர்வு நம்மைப் போல் மழுங்கிய ஒன்றல்ல. சிரிப்பும் க‌ற்ப‌னையும் அத‌ன் உன்ன‌த‌ நிலையில் செய‌ல்ப‌டும் த‌ருண‌ங்க‌ள் அது. நிறைய‌ க‌தைக‌ளைத் த‌ம‌க்குள் வைத்துக்கொண்டிருந்தார்க‌ள். முல்லாக் க‌தைக‌ள் தொட‌ங்கி அவ‌ர்க‌ளுள் நிறைந்திருந்த‌ க‌தைக‌ள் ஏராள‌ம். க‌தைக‌ள் சொல்ல‌ அவ‌ர்க‌ள் எந்த‌ த‌ய‌க்க‌மும் காட்ட‌வில்லை. க‌தைக‌ளை ஆர‌ம்பித்தால் போதும் சொல்லிக்கொண்டே சென்றார்க‌ள்.

    க‌தை சொல்லி முடித்து வெளியே வ‌ந்தேன் . இருட்டிய‌ வானில் அரை நில‌வோடு வெள்ளிக‌ள் மிக‌ப்பிர‌காச‌மாக் மின்னிக் கொண்டிருந்த‌ன‌. குதுகாலிக்கும் ம‌ன‌நிலையை என்னுள் கிள‌றி விட்ட‌து. ‘க‌ப்ப‌ல் பார்க்க‌ விட்ட‌ சேவ‌க‌ன் என்ன‌ செய்திருப்பான்’ என‌ சிறுவ‌ய‌து முதல் யோசித்திருக்கிறேன். பதிலில்லை. இந்த‌ சேவ‌க‌ன் க‌தைக‌ளோடு க‌தைக‌ளின் வாச‌னையோடு த‌ன்னை இழ‌ந்து திரும்புகிறான்.

    அ. வெண்ணிலாவின் கதைகளை கேட்க கீழே உள்ள ப்ளே ஐகானை அழுத்தவும்.


    http://koodu.thamizhstudio.com/kadhaisolli_18.php

    No Comments
  • மதகொண்டபள்ளி கல்வி நிறுவனம்-MEC (Mathagondapalli Education Centre)

    மதகொண்டபள்ளி கல்வி நிறுவனம்.

    இயற்கையின் எழில் கொஞ்சும் அழகிய மலைகள் எந்த பக்கம் திரும்பினும் பசுமை நிறைந்திருக்கும் ரம்மியமான சூழல் பார்க்கும் இடங்கள் அத்தனையிலும் இயற்கை அன்னை தன் கொடையை வாரி வழங்கி இருக்கிறாள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல அமைதிக்கும், அறிவுக்கும் அழகு சேர்க்கும் இடமாக தான் அமைந்திருக்கிறது மதகொண்டபள்ளி கல்வி நிறுவனம்.

     

     

    பள்ளிக்குள் நுழையும் போதே கோவிலுக்குள் நுழைவது போன்ற அமைதியான உணர்வினை அங்கு செல்லும் ஓவ்வொவரும் உணர முடியும் அங்கிருக்கும் செடிகளும், மரங்களும் கூட மௌனம் காக்கிறதோ என்று சொல்லும் அளவுக்கு அத்தனை நிசப்தம்.

    இத்தகைய ஒரு பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிட்டாமல் பொய் விட்டதே என இங்கு வரும் அனைவரும் ஏங்குவர்.

    மெத்த படித்தவர்களே சிறிது நேரத்தில் கலங்கி போய் விட கூடும். இங்கு பயிலும் மாணவர்களுக்கு திறமைசாலிகள். நாம் இங்கிருக்

    கும் மாணவர்கள் ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இங்குள்ள குழந்தைகளின் ஆங்கிலப் புலமையை நோக்கும் போது நாம் இருப்பது தமிழ்நாட்டிலா அல்லது இங்கிலாந்திலா என கேட்கும் அனைவரும் சந்தேகப்பட கூடும்.

    உண்மை, நேர்மை, ஒழுக்கம், திறமை, கல்வி என அத்தனை பண்புகளிலும் சிறந்து விளங்கும் இக்குழந்தைகள் அனைவரும் குற்றவாளிகளின் குழந்தைகள் என எண்ணும் போது நெஞ்சம் கணத்து போவது நிதர்சனம். ஆனால் அவர்கள் அப்படி இல்லாவிட்டால் இங்கு படிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்து இருக்காதே என்று நினைக்கும் போது தீமையிலும் நன்மை என்ற முதுமொழி தான் நினைவுக்கு வருகிறது.

    ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் வாழ்கையில் ஒரு முறையாவது அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய கல்விக் கோயில் தான் மதகொண்டப்பள்ளி கல்வி நிறுவனம்.

    Address:

    RURAL INSTITUTE FOR COMMUNITY EDUCATION – MATHAGONDAPALLI MODEL SCHOOL,
    Mathagondapalli village and post,
    Via Hosur,
    Krishnagiri District, – 635 114
    Tamil Nadu, India
    Tel : +91-4347-237160, 237161
    Fax- +91-4347-237158
    e-mail – ricemms2000@gmail.com
    website – www.ricemms.org
    skype: rice.mms

    http://picasaweb.google.com/arunbalajithebest/MathagondapalliEducationCentreThisPlaceIsLivingHeavenForUs#

    கருத்தை பதிவு செய்யவும்…

    நன்றி ……
    – பொள்ளாச்சி அருண்பாலாஜி –

    No Comments
  • கவிஞர் அ.வெண்ணிலா

    நிலவைப் பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். அப்படியிருக்க; ஒரு கவிஞரின் பெயரே வெண்ணிலா.

    அ.வெண்ணிலா என்கிற அந்தக் கவிஞரின் பெயரைக் காணும்போதெல்லாம் ஓ! நிலவுக்கே இனிசியல் இருக்கே என்றுதான் நினைக்கத் தோன்றும். அந்த வெண்ணிலாவுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம். கவிஞர் மு.முருகேஷின் கரம் பிடித்த அவருக்கு இப்போது மூன்று நிலாக்கள். (பெண்ணுக்கு நிலா, ஆணுக்கு சூரியன் என்பதுதானே பொதுவில் இருக்கு )

    கவிஞர் என்ற ஒற்றை அடையாளம் மட்டுமல்ல சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், கட்டுரை ஆசிரியர் என்ற பன்முகங்கள் கொண்டவர் வெண்ணிலா. மிக முக்கியமாக பாடம் புகட்டும் ஆசிரியர் என்கிற முகமும் இருக்கிறது.

    வசித்து வரும் வந்தவாசியிலிருந்து அவர் தொலைபேசி வாயிலாக தனது வாழ்வை வாசித்தார். இதோ – சென்னையில் பதிவான வெண்ணிலாவின் வெளிச்சம்.

    நவீன இலக்கியத்தளம் விட்டு இடம்பெயரும் எண்ணமில்லையா?

    வாசிக்கத் தெரிந்த நாள் முதல் அப்பா வாசிக்கச்சொன்னவற்றை மட்டுமே வாசித்தேன். பதின் மூன்று வயசுக்கு பிறகு புத்தகபிரியை ஆனேன். கிடைத்ததை எல்லாம் வாசித்தேன். இருபது வயசுக்கு பின் எனது பார்வை நவீன இலக்கியம் பக்கம் திரும்பியது. இதுதான் என்று முடிவெடுத்தேன். அதன்பிறகு நவீன இலக்கியத்தின் மீதான ஆர்வம்தான் எனக்குள் இருக்கிறது. அது குறித்துதான் எனது தேடலும் இருக்குது. எப்போதும் என்னை நவீன இலக்கியவாதி என்று வெளிப்படுத்திக்கொள்ளவே விருப்பம்.

    அதிகம் படிக்கும் பழக்கம் இருக்கு. ஆனால் அதிகம் படைப்பதில்லையே ஏன்?

    அப்பா திராவிடர் கழகத்தில் இருந்ததால் பெரியார் புத்தகங்களை நிறைய வாசிக்கச் சொல்வார். வாசித்து முடித்த பிறகு அந்த புத்தகம் குறித்து கேள்விகள் கேட்பார். நான் பதில் சொல்வேன். அந்த கேள்வி பதில் பொழுதுகளே நல்ல விவாதமாக அமையும். வாசிப்பது அது குறித்து விவாதிப்பது என்று இருந்துவிட்டேன். நாமும் படைக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது.நான் சின்ன வயதில் இருந்தே கவிதை எழுதத்தொடங்கி விட்டேன் என்று எல்லோரும் சொல்லும் பதிலை என்னால் சொல்லமுடியாது. ஏன் தெரியுமா? நான் எழுதத்தொடங்கியதே இருபத்து ஏழு வயதில்தான்.

    எழுதத்தொடங்கிய பிறகும் சில பதிவுகள்தான் செய்திருக்கிறேன். ‘நீரில் அலையும் முகம்’, ’ஆதியில் சொற்கள் இருந்தன’ ‘கனவை போலொரு மரணம்’ என்று மூன்று கவிதை தொகுப்புகளும் ‘பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில்’ என்ற சிறுகதை தொகுப்பு மற்றும் ‘கனவிருந்த கூடு’என்ற காதல் கடிதங்களின் தொகுப்பும் பெண் எழுத்தாளர்களின் வாழ்க்கை பற்றிய ஆவணத்தொகுப்பாக’மீதமிருக்கும் சொற்கள்’ ஆகியவைதான் எனது பதிவுகள்.

    நிறைய படிக்க வேண்டும் நிறைவான படைப்புகளை தரவேண்டும் என்று விரும்புகிறேன். இதுதான் நான் அதிகம் எழுதாமல் இருப்பதற்கான காரணம்.

    தலைப்பில்லா கவிதைகளே எழுதிவருகிறீர்களே; தலையாய காரணம் என்ன?

    கவிதைகளை ஒரு வட்டத்துக்குள் வைக்க விருப்பமில்லை. இஷ்டத்திற்கு இருக்க வேண்டும் என்பதால்தான் தலைப்பு வைப்பதில்லை. இஷ்டத்திற்கு என்று சொன்னது – சுதந்திரம்!. அப்புறம் முக்கியமான ஒன்று… தலைப்புகள், இது குறித்துதான் என்பதை உணர்த்திவிடுகிறது. எது குறித்து என்கிற தேடல் இருக்க வேண்டும். அந்த தேடலில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். அது எனக்கு பிடிக்கும். அதனால்தான் அப்படி எழுதுகிறேன்.மற்றவர்களுக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன்.

    ஒரு உறைக்குள் இரு வாள் என்பது மாதிரி ஒரு வீட்டுக்குள் இரு கவிஞர்கள் இருக்கிறீர்கள். உரசல்கள் வருவதற்கு சந்தர்ப்பங்கள் அமைந்திடுமே?

    இருவரும் கவிஞர்கள் என்பதாலும் காதல்திருமணம் என்பதாலும் நல்ல புரிதல் இருக்கு. மற்றபடி இலக்கியம் குறித்தான சூடான விவாதம் அடிக்கடி நிகழும். விவாதத்தில் ஆவி பறக்கும். எனது எல்லாக் கவிதைகளையும் அவர் பாராட்டியிருக்கிறார். அவரின் சில கவிதைகளை மட்டுமே நான் பாராட்டியிருக்கிறேன். ஹைக்கூ கவிதைகளை அவர்(மு.முருகேஷ்) எழுதிக்குவிக்கிறார். எனக்கு அவற்றில் விருப்பமில்லை. அப்படியிருந்தும் பதினைந்து ஹைக்கூ கவிதைகள் எழுதியிருக்கிறேன்.

    காதலித்தால் கவிதை வரும் என்பார்கள். கவிதை எழுதினாலும் காதல் வரும் என்பார்கள். நீங்க சொல்லுங்க. கவிதை வந்ததும் காதல் வந்ததா? காதல் வந்ததும் கவிதை வந்ததா?

    காதல் என்னை காதல் கடிதங்கள்தான் எழுதவைத்தது. திருமணம்தான் என்னை கவிதை எழுத வைத்தது. எனது முதல் தொகுப்பே காதல் கடிதங்களின் தொகுப்புதான். ’கனவிருந்த கூடு’ எனும் அத்தொகுப்பில் இருக்கும் கடிதங்கள் அனைத்தும் ஆறு மாதங்களாக நான் அவருக்கு எழுதிய காதல் கடிதங்களே. இத்தொகுப்பையும் திருமணத்திற்கு பிறகே வெளியிட்டேன்.

    தோழர்களுடன் இணைந்து ‘பூங்குயில்’ சிற்றிதழ் நடத்தினேன். அது சம்பந்தமான விழாக்களுக்கு அடிக்கடி அவர் வருவார். ஆரம்பத்தில் இலக்கியங்கள் பற்றிய விவாதமாகத்தான் இருந்தது எங்கள் பேச்சு. பின்பு காதலானது. 1991 முதல் 97 வரை நண்பர்களாக இருந்தோம். அப்புறம் ஆறுமாதம் காதலர்கள். அதன்பிறகுதான் திருமணம் பற்றிய முடிவுக்கு வந்தோம்.

    என்னதான் நானும் அவரும் ஆறு வருடங்கள் பழகியிருந்தாலும் கல்யாணம் என்று முடிவெடுத்துவிட்ட பிறகு எனக்குள் ஒரு வித கலக்கம். ஒரே பயம். அந்த பயம்தான் என்னை கவிதை எழுத வைத்தது. அடுத்த ஆண்டும் வசந்தம் ஆர்ப்பாட்டமாய் வரும்..என்று தொடங்கும் அந்தக்கவிதை.

    ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு வரை தந்தையின் பெயரே இனிசியல். திருமணத்திற்கு பிறகு கணவரின் பெயரே இனிசியல் என்பது தமிழ்வழக்கம். இதில் ஏன் முரண்பட்டீர்கள்?

    திருமணத்துக்கு பிறகு ஆணின் பெயரில் எந்த மாற்றமும் இல்லை. பெண்ணின் பெயரில் மட்டும் ஏன் மாற்றமிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? தந்தை பெயர்தான் இனிஷியலாக இருக்க வேண்டும் என்பதும் ஆணாதிக்கம். தாய்,தந்தை பெயர்தான் பெயருக்கு முன்னால் இருக்கவேண்டும்.

    அ.வெண்ணிலா என்று அடையாளப்பட்டுவிட்டதால் அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் என் மூன்று குழந்தைகளுக்கும் மு.வெ.கவின்மொழி, மு.வெ. அன்புபாரதி, மு.வெ.நிலாபாரதி என்று பெயர் வைத்துள்ளேன். அன்புபாரதியும் நிலாபாரதியும் இரட்டையர்கள்.

    இனிசியல் குறித்து பேசியதால் நினைவுக்கு வந்தது. ஆண்கள் – பெண் பெயரில் எழுதக்கூடாது என்று சொல்லிவருகிறீர்களே?

    சமீப காலத்தில் பெண்களின் குரலும், தலித்துகளின் குரலும், திருநங்கைகளின் குரலும், விளிம்புநிலை மக்களின் குரலும் தனித்த அடையாளங்களைக் கொண்டவை. வரலாற்றை மீள்பார்வை செய்பவை. வரலாற்றுக்கு எதார்த்த நிலையை தருபவை. இதில் பால் வேறுபட்டு புணைப் பெயரை சூடுதல் வரலாற்று திரிபை உண்டாக்கும்.

    தமிழ் பெண் சிறுகதை எழுத்தாளர்களின் வரலாற்றை ஆவணமாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினேன். 1927 முதல் 2000 வரையிலான கால கட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்கள் பட்டியலை தயார் செய்து கொண்டு எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களை சந்தித்தேன்.

    இவர் தன் மனைவி பெயரில் எழுதியவர், இவர் தன் தாயின் பெயரில் எழுதியவர் என்று பல பெயர்களை அடித்துவிட்டார் அவர். வல்லிக்கண்ணன் போன்ற அனுபவமிக்க எழுத்தாளரின் அந்த வழிகாட்டுதல் இல்லாதிருந்தால் என் தொகுப்பில் பிழை நேர்ந்திருக்கும்.

    ஆய்வு செய்துதானே ஆவணப்படுத்த வேண்டும். பின்பு எப்படி வரலாற்று திரிபு ஆகும் என்று கேட்கலாம். சில எழுத்தாளர்களுக்கு குறிப்புகள் இருக்கு. பல எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளே இல்லை. இருபத்து ஏழுகளில் எழுதிய எழுத்தாளர்களின் படைப்புகளையே மிகுந்த சிரத்தையுடன் தேடவேண்டியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெயர் தேர்வும், புனைபெயரும் படைப்பாளியின் சுதந்திரம்தான். ஆனால், கறுப்பின எழுத்து, தலித் எழுத்து என்று சிலவற்றிற்கு தனித்த அடையாளம் இருக்கு. பெயர் மாற்றி எழுதுவதால் அடையாளங்கள் வேறுவிதமாக அர்த்தத்தை தந்து விடுகின்றன.

    இன்றைக்கு ஒடுக்கப்பட்ட, கீழ்நிலைக்குத் தள்ளப்பட்ட பால்வேறுபாட்டை/இன வேறுபாட்டை அடையாளப்படுத்தும் குரல்களும் ஒலிக்கத் துவங்கியுள்ள காலத்தில் எழுதுபவன் சுயம் பற்றிய அடையாளமும் தேவைப்படுகிறது. பொதுவான இலக்கியம் படைப்பவர்கள் வரலாற்று திரிபு ஏற்பட காரணமாக இருக்கக்கூடாது.

    பெண் சிறுகதை எழுத்தாளர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் எண்ணம் எப்படி வந்தது?

    பெயர் சொல்லும் பிள்ளை என்பது போல் எழுத்தாளர்களின் பெயர் சொல்லும் கதைகளும் இருக்கின்றன. சில படைப்புகள் படைப்பாளியைப்பற்றி அறிய ஆவலைத்தூண்டும். சிறுகதைகளை அதிகம் படிக்கும் நான் அச்சிறுகதைகளின் ஆசிரியர்கள் பற்றிய முழு விபரங்களை அறிய விரும்பினேன். அதற்கான முயற்சியில் இறங்கினேன். இந்த தேடல் எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் அமையும் என்கிற நம்பிக்கை இருந்ததால் தேடலை தீவிரப்படுத்தினேன். மூன்று வருட தேடலுக்கு பிறகுதான் ‘மீதமிருக்கும் சொற்கள்’ உருவானது.

    எழுத்தாளர் அனுத்தமாவுக்கு இப்போது 90வயசு. சரியாக பேச முடியாத நிலையில் இருந்தார். சிரமப்பட்டுத்தான் அவரும் பேசினார்; நானும் குறிப்புகளை சேகரித்தேன். மூப்பின் காரணமாக சரியாக பேசமுடியாத நிலையிலும் காது கேளாத நிலையிலும் சுயநினைவு சரியாக இல்லாத நிலையிலும் இருந்தார் கிருத்திகா. அவரது உறவினர்களின் உதவியுடன் அவரை கொஞ்சம் கொஞ்சம் பேச வைத்தேன். இந்த தொகுப்பில் இருக்கும் பலர் இப்போது உயிருடன் இல்லை. இந்நூல் வருவதற்கு உதவிய வல்லிக்கண்ணன், சிட்டி முதலான பெரும் படைப்பாளிகள் இந்நூல் வெளிவந்தபோது உயிருடன் இல்லை. மனசுக்கு கஷ்டமாக இருந்தது.

    முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் இப்போது முதியோர் இல்லத்தில் இருக்கிறாரே; சந்தித்தீர்களா?

    ‘மீதமிருக்கும் சொற்கள்’-க்காக அவருடன் தொலைபேசியில் தான் பேசினேன். இப்போது அவர் விச்ராந்தி முதியோர் இல்லத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன். பிள்ளைகள் இல்லாததால் கணவர் இறந்தபிறகு ( 2002ல்) சொந்தத்தை நம்பி இருந்திருக்கிறார். இருந்ததை எல்லாம் சொந்தங்கள் பிடிங்கிக்கொண்டதால் இந்த என்பத்து மூன்று வயதில் இப்படிப்பட்ட நிலைக்கு வந்திருக்கிறார்.

    இருபத்தைந்தில் திருச்சி முசிறியில் பிறந்த இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். உப்பள மக்களின் வாழ்க்கை பற்றி எழுதிய ‘ வேருக்கு நீர்’ படைப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். அவருக்கா இந்த நிலமை என்று நினைக்கும் போது கஷ்டமாக இருக்கு. அவரை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அது வெறும் அனுதாபம் குறித்த சந்திப்பாக இருக்கக்கூடாது. அர்த்தமுள்ள சந்திப்பாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். மீதமிருக்கும் சொற்களில் அவரை வைத்துவிட்டாலும் இன்னும் அவரைப்பற்றிய பதிவுகள் ஏதும் பண்ணனும் என்று விரும்புகிறேன்.

    தேவதாசிகளின் போராளி ராமாமிர்தத்தின் போராட்டங்கள் குறித்தும் வரலாற்றில் அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என நீங்க எழுதியிருப்பதும் முக்கியமான பதிவு. ராமாமிர்தம் பற்றி அறிய முற்பட்டது எப்படி?

    மதிபெற்ற மைனர் அல்லது தாசிகளின் மோசவலை என்று மூவலூர் ஆ.ராமாமிர்தம் எழுதிய நாவலை படித்தேன். அந்த நாவல் கிட்டத்தட்ட சுயசரிதை போன்று தன் வாழ்வை அடிப்படையாகக்கொண்டு அவர் எழுதியிருக்கிறார். இந்த நாவலே அவரைப் பற்றி, தேவதாசிகளும் ராமாமிர்தத்தின் போராட்டங்களும் என்ற கட்டுரை எழுத வைத்தது. தேவதாசிப்பெண்களிடையே விழிப்புணர்வை உண்டாக்குவதற்காக அவர்களையே உறுப்பினர்களாக கொண்ட நாகபாசத்தார் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த சங்கமே இசை வேளாளர் சங்கம் என பெயர் மாற்றப்பட்டு இசை வேளாளர் மாநாடு, தேவதாசிகள் மாநாடு போன்றவற்றை நடத்தியுள்ளது.

    தமிழகத்தில் இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களே தேவதாசிகளாக்கப்பட்டுள்ளனர். பொட்டு கட்டுதல், சுமங்கலி சடங்கு முதலான சடங்குகளின் மூலம் ஒரு பெண் தேவதாசியாக்கப்பட்டிருக்கிறாள்.

    கோயிலில் நாட்டியப்பெண்ணாகவும் தெய்வத்தின் முன்னால் இசைப்பாடல் இசைப்பவளாகவும் பூஜைக்கு தேவையான பணிகளை செய்பவளாகவும் தேவதாசிப்பெண்களின் முக்கியப்பணிகள் இருந்துள்ளன. தேவதாசிப்பெண்களை இம்முறையில் இருந்து விடுவித்து அவர்களை திருமண வாழ்க்கைக்குள் கொண்டு வந்துள்ளார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் இருவரின் தொடர் முயற்சியால் தேவதாசி முறை ஒழிப்பிற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் துவங்கின.

    நாட்டின் கலை கலாச்சாரத்தினை காப்பதற்கு ஒரே வழி தேவதாசி முறையை தக்க வைத்திருப்பதே என்று முட்டுக்கட்டை போட்டனர். இத்தனை காலம் எங்கள் வீட்டுப்பெண்கள் கலையையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றியது போதும். இனி கொஞ்ச காலத்திற்கு உங்கள் வீட்டு பெண்களை தேவதாசிகளாக்குங்கள் என்று முத்துலட்சுமியை சட்டமன்றத்தில் பேசவைத்தவர் மூவலூர் ராமாமிர்தம். தேவதாசிகள் முறை ஒழிப்பு போராட்டத்தில் ராமாமிர்தம் முக்கிய பங்கு வகித்தார். அவரின் போராட்டத்திற்கு முத்துலட்சுமியும் உறுதுணையாக இருந்துள்ளார். ஆனால் வரலாற்றில் முத்துலட்சுமிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ராமாமிர்தத்துக்கு தரவில்லை என்பதுதான் வேதனை.

    இசை வேளாளப்பெண்களின் தொழிலாக இருந்த பரதமும் நாட்டியமும் எப்படி மேல் தட்டு நாகரிகமானது என்ற கேள்விக்குறியோடு அந்த கட்டுரையை நிறைவு செய்திருந்தீர்கள். எப்படி என்பதற்கான தேடல் தொடர்ந்ததா?

    இன்று பரதநாட்டியம் என்றால் ’கலாஷேத்ரா’, கலாஷேத்ரா என்றால் பரதநாட்டியம் என்கிறார்கள். இந்த கலாஷேத்ராவை நிறுவியவர் அமரர் ருக்மணி அருண்டேல். இவருடைய காலத்திற்கு பிறகுதான் இசை வேளாளப்பெண்களின் பரதநாட்டியம் மேல் தட்டு மக்களின் கலையானது. குறிப்பாக பார்ப்பனப் பெண்களின் கலையானது.

    பார்ப்பனப் பெண்ணான ருக்மணி அருண்டேல் பரதநாட்டியத்தின் மேல் ஆர்வம் கொண்டபோது, தேவதாசிகளின் கலையின் மேல் நீ ஆர்வம் கொள்வதா என்று பார்ப்பனர்களால் எதிர்ப்பு கிளம்பியது. பல எதிர்ப்புகளையும் மீறி அந்தக்கலையை கற்றுக்கொண்டதோடு அல்லாமல் அதை கற்றுக்கொடுக்கவும் ஆரம்பித்தார். இப்படித்தான் இது மேல் தட்டு கலையாக மாறியிருக்கிறது. பொதுவாக இது மக்களுக்கான கலை என்று அடையாளப்படுதாமல் உயர் சாதிக்கென்று ஆக்கிவிட்டார். அதுதான் கொஞ்சம் நெருடுகிறது.

    இதைப்பற்றி பேசும்போது இது சம்பந்தமான வருத்தத்தையும் சொல்லவேண்டும். தேவதாசி ஒழிப்பு போராட்டத்தால் அரசு செவிசாய்த்தது. கோயில்களில் இருந்து தேவதாசிகளை விலக்கி வைத்து தேவதாசிகளுக்கு சொந்தமான நிலங்களை கட்டாயம் தேவதாசிகளிடம் வழங்கவேண்டும் என்று அரசு சட்டம் போட்டது. ஆனால் அச்சட்டம் முறையாக நடைமுறைப் படுத்தவில்லை.

    கோயில் நிலங்களை தங்கள் வசம் வைத்திருந்த பிராமணர்களும் பிறசாதியினரும் தேவதாசிகளுக்கு நிலங்களை வழங்கவில்லை. நிலவருவாய் அளிப்பதையும் நிறுத்திவிட்டனர். பிழைக்க வழியின்றி சமூக புறக்கணிப்போடு பல தேவதாசிகளின் வாழ்க்கை கேள்விக்குறியானது. இதனால் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி இருவரையும் தேவதாசிகளின் முன் குற்றவாளிகள் போல் ஆகிவிட்டார்கள். பழைய வாழ்வே நல்லாதானே இருந்தது… இப்படி நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிட்டாளே நம் குலத்தை அழிக்க பிறந்தவள்… என்று ராமாமிர்தத்தை தீட்டித்தீர்த்துள்ளார்கள் தேவதாசிப்பெண்கள்.

    அடுத்து உங்களின் படைப்பு என்ன?

    சாகித்ய அகாதமிக்காக ‘கனவும் விடியும்’எழுதியிருக்கிறேன். அடுத்து, கைத்தறி நெசவு மக்களின் கையொடிந்து போன வாழ்க்கையை பதிவு செய்யும் முயற்சியில் மும்முரமாயிருக்கிறேன்.

    காஞ்சீபுரம் பக்கம்தான் என் ஊர் வந்தவாசி ’அம்மையப்பட்டு’ . கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை நன்கு அறிவேன். பொதுவாகவே மண்ணின் மரபு மாறிப்போச்சு. அந்த மாற்றங்களும் அதில் பதிவாகும். கம்ப்யூட்டர் காலம் என்னவெல்லாமோ செய்துவிட்டதால் கைநெசவு இல்லாமல் போய்விட்டது. கைநெசவு கைவிட்டதால் பிழைப்பு தேடி நகரம் சென்று நரகவேதனையை அனுபவிக்கும் அந்த மக்களின் பதிவுக்காக நான் பல காலம் செலவழித்துவருகிறேன்.

    படிப்பது, படைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் பாடவேண்டும்(நன்றாக) என்பது நெடுநாள் ஆசை. அதற்காக வாய்ப்பாடு கற்று வருகிறேன். கைத்தறி நெசவு மக்கள் பதிவுக்கு பிறகு எனது படைப்பு தனிபாடல் தொகுப்பாக இருக்கலாம். ஆசிரியையாகவும் இருப்பதால் நினைத்த நேரத்தில் எதையும் செய்ய முடியவில்லை.

    உங்க மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் பற்றி சொல்லமுடியுமா?

    சுற்றி வளைத்து எங்கே வருகிறீர்கள் என்பது புரிகிறது. ( ஒரு சிறிய சிரிப்புக்கு பின் ) ஆசிரியர் என்பதற்கு அர்த்தம் தெரியும். அதன்படி நடக்கிறேன். ஆனால் ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆரம்ப காலங்களில் அழுது அடம்பிடித்துக் கொண்டுதான் பள்ளிக்கு போவேன்.

    இப்போது எம்.ஏ.உளவியல், பி.எஸ்.சி.கணிதம், எம்.எட். படித்திருக்கிறேன். அப்போது பத்தாம் வகுப்பு படித்ததும் அப்பாவும், அம்மாவும்(வசந்தா) ஆசிரியர் பயிற்சிக்கு படிக்கவைத்தார்கள். பதினெட்டு வயதிலேயே ஆசிரியர் ஆகிவிட்டேன். வேண்டா வெறுப்பாகத்தான் ஆசிரியர் பொறுப்பேற்றேன். ஒவ்வொரு நாட்டின் தலைவிதியும் வகுப்பறையில் தான் நிர்ணயிக்கப்படுகின்றன என்று நேரு சொல்வதை மெல்ல மெல்ல உணர்ந்தேன். நான் படித்த அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலேயே இப்போது பணியாற்றுகிறேன்..’ என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வெண்ஸ் யாரு போன்ல….என்ற குரல். ’அவர் வந்திருக்கிறார்’ என்றபடி தொடர்ந்தார்.

    என் வீட்டுல நான் ஒரே பொண்ணு. அப்படி இருந்தும் எனக்கு செல்லப்பெயர் கிடையாது. என்னம்மா என்னை இத்தனை பெயர் சொல்லி அழைக்கறீங்க என்று என் மகள்கள் கேட்பார்கள். அத்தனை செல்லப்பெயர்களில் அவர்களை அழைப்பேன். அது ஏன் என்றே தெரியவில்லை எனக்கு செல்லப்பெயர் வைக்கவில்லை. அதுக்கு வட்டியாகத்தான் அவர் வெண்ஸ்..வெண்ஸ்… என்று கூப்பிடுகிறார்’ என்றவர் பேச்சை நிறுத்தினார்.

    இதைப்போய் எதுக்கு சொல்லனும் என்று ஜாடையொளி சிந்தியிருப்பாரா வெண்ணிலாவின் அவர். ’ம்..இருக்கட்டும்’ என்று அங்கே பதில் சொல்லிவிட்டு, ’என் மேல் அவருக்கு ரொம்ப பிரியம்….’ என்று இங்கே சொல்லிவிட்டு மீண்டும் ஒரு சிறிய சிரிப்பு. வெளியே இப்படிச் சொன்னாலும் இன்னும் தன் கணவரின் காதலை முழுமையாக பெறவில்லை வெண்ணிலா.

    சாப்பிடும் சோறு பேசும் பேச்சு சிரிக்கும் சிரிப்பு எல்லாம் குழந்தைக்காக என கரு சுமந்து… நாளை உன்னோட வண்டியில் முன்நின்று சிரித்து வர உன் இனிசியல் போட்டுக்கொள்ள உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன் நான்கைந்து மணிநேரம் ரத்த வெள்ளத்தில் மிதந்து கேட்டால் கிடைக்கும்தான் உன் முத்தம் உன் அரவணைப்பு உன் ஆறுதல் பச்சப்புள்ள கேட்டா பாலூட்டுகிறோம் கரு சுமந்து குழந்தை தவமிருக்கும் பெண்களை சுமக்க எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.

    – என்று அவர் எழுதியிருக்கும் கவிதை அதைத்தான் உணர்த்துகிறது.

    1 Comment
  • அரசு Volvo-வில் ஒரு பயணம் !

    காலை 9.30 மணி என் இரு சக்கர வாகனத்தை பழுதுப்பார்க்க கடையில் கொடுக்க சென்று இருந்தேன். அவர்கள் மாலை 5.30 மணிக்கு வர சொன்னார்கள். நானும் சரி அலுவலகம் செல்லலாம் என்று அருகில் இருக்கும் பஸ் நிலையத்தை தேடினேன். சற்று தூரம் நடக்க வேண்டியது ஆயிற்று. ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு கிண்டி திரு.வி.க பேருந்து நிறுத்தம் அடைந்தேன்.

    எல்லோருக்கும் தெரியும் கிண்டி திரு.வி.க பேருந்து நிறுத்தம் ரோட்டிலேயே அமைந்து இருக்கும். திருவிழா கூட்டம் போல் மகக்ள் நிற்கிறார்கள். நான் ஓம்.எம்.ஆர் (OMR) என்று அழைக்கப்படும் பழைய மால்லபுரம் சாலையில் இருக்கும் ஆர்.ஆர்.ஈ (RRE) பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் என் அலுவலகம் செல்ல வேண்டும். ஆனால் கிண்டி திரு.வி.க பேருந்து நிறுத்தத்தில் அதிக மக்கள் கூட்டம் நிலவுகிறது. ”நான் இன்று போய் சேர்ந்தாற்போல் தான் ! ” என்று நினைக்கையில் பஸ்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அதே நேரத்தில் அதிக மக்கள் நிரம்பி வழிந்து சென்றும் இருக்கிறார்கள்.

    நான் மனதில் “ஓ இன்று நாம் அலுவலகத்திற்கு மட்டம் தான் போல என்று அப்போது ஆபத்துபாண்டவனாக அரசின் மாநகர போக்குவரத்து கழக குளிர்சாதன பேருந்து என் அருகில் வந்து நின்று தானியிங்கி கதவை ஓட்டுநர் திறக்க குளிர்சாதன காற்று என் முகத்தில் தென்றல் வீசியது நான் என்னை அறியாமலே ஏறிவிட்டேன் அமர்வதற்கு இடம் இல்லை எனினும் நிற்பதற்கு இடம் இருந்தது. எங்கேயோ பாட்டு பாடுவது போல் இருந்தது. அது குளிர்சாதன Volvo பேருந்தில் இருந்து தான் அந்த பாட்டு மிகவும் அருமையான இசை. மெல்லிய சத்தத்தில் ஒளிர்கிறது. அமர்ந்து இருப்பவர்கள் எல்லோரும் ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார்கள். தியானமா என்று கேட்கிறீர்களா, ஆம் ஆழ்ந்த உறக்கத்தை தான் நான் அவ்வாறு கூறினேன். என்ன பேருந்தில் உறங்குவதால் குறட்டை சத்தம் இல்லை. குளிர் 18oC வெப்பநிலை, இனிமையான இசை வெளியே வரும் இரைச்சல் கேட்காதவாரு கண்ணாடி அமைக்கப்பட்டு உள்ளது. நடத்துனர் என் அருகே வந்து பயணச்சீட்டு கேட்டார். எங்கே போகணும்? நான் அதற்கு (RRE) என்று கூறினேன். நான் 50 ரூபாய் கொடுத்தேன். மனதில் இன்னும் கேட்பார் போல என்று நினைக்கும் கனத்தில் ரூபாய் 25 யை திருப்பி தந்தார். பொதுவில் ஆர்.ஆர்.ஈ நிறுத்தத்தில் விரைவு பேருந்தோ, மஞ்சள் பலகை, பச்சைப் பலகை, LSS. (எல்.எஸ்.எஸ்) பேருந்து நிற்காது. இவை அனைத்தும் மூட்டைக்காரன் சாவடி, P.T.C மேட்டுக்குப்பம் ஆகிய நிறுத்த்தில் தான் நிற்கும். நான் இதில் ஏதேனும் ஒரு நிறுத்தத்தில் இரங்கி பின்பு அலுவலகத்தில் நடப்பேன்.

    சற்று தூரம் சென்ற உடன் எனக்கு அமர்வதற்கு இருக்கை கிடைத்தது. ஒரு வழியாக நிம்மதியாக அமர்ந்தேன். கண்ணாடி வழியாக பார்த்தால் சத்தம் இல்லாத படத்தை காண்பது போல் இருந்தது. எனக்கு பேருந்து நகர்வதோ, குழியில் இறங்கி ஏறுவதோ தெரியவே இல்லை. நான் விமானத்தில் சென்று உள்ளேன். அதில் கூட ஏறும் போதும், இறங்கும் போதும் சில அதிர்வுகளை உணர முடியும். இந்த அரசு Volvo பேருந்து குண்டும் குழியுமாக உள்ள தரமணி சாலையில் செல்லும் போது கூட எனக்கு அதிர்வுகள் தெரியவே இல்லை. எனக்கும் தியானம் செய்ய வேண்டும் போல இருக்கையில் என்னை அறியாமலே என் கண்கள் மூடின. நானும் சாமியாட வேண்டியது ஆயிற்று அன்று தான் நான் சொகுசு என்றால் என்ன என்பதை உணர்ந்தேன்.

    வழக்கத்திற்கு மாறாக பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் ஐடி நிறுவனங்களின் முகப்பில் நின்றது. நான் சென்ற பேருந்து கோயம்பேட்டில் இருந்து, கேளம்பாக்கம் செல்லும் பேருந்து அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் ஐடி துறை சார்ந்தவர்கள். எல்லோர் உடைய கழுத்திலும் மாட்டுக்கு மணிகட்டுவது போல அடையாள அட்டையை அணிந்து இருந்தார்கள்.

    அப்போது தான் புரிந்தது இது தானியை (ஆட்டோவை) போன்றது என்று. உங்களுக்கு தெரியும் OMR-ல் தான் அனைத்து ஐகூ நிறுவனங்களும் இருக்கின்றன. நான் கவனித்த வரையில் இதில் பயணம் செய்பவர்கள் எல்லோரும் ஐடியில் வேலை செய்பவர்கள் ஏன்? நானே ஐடி துறையில் தானே வேலை செய்கிறேன்.

    நான் ரோட்டை கூர்ந்து கவனித்தேன். OMR-ல் நிறை அரசு Volvo குளிர்சாதன பேருந்து தான் அதிகம் காணப்பட்டது. நான் வழக்கமாக இருசக்கர வாகனத்தில் வருவதால் எனக்கு இது தெரியவில்லை. இந்த மாதிரி சொகுசு பயணம் யாருக்கு கிடைக்கும். அதுவும் இந்த வெயிலில் இனிமையான இசை, நடத்துனரே நேரில் வந்து பயணச்சீட்டு கொடுப்பார் (மத்த அரசு மாநகர பேருந்தில் அது கிடையாது நாம்தான் நடத்துனர் இருக்கைக்கு சென்று வாங்க வேண்டும்) நினைத்து இடத்தில் இறங்கி கொள்ளலாம். மக்கள் நெரிசல் இல்லை. மணிக்கு சென்று விடாலம். சொகுசு பயணம். விலையே 25 ரூபாய் மட்டும். நான் இதை எல்லாம் நினைக்கையிலேயே என் அலுவலகம் அருகில் வர நான் நடத்துனர் இடம் செல்ல அவர் என் அலுவலக முகப்பிலேயே என்னை இறக்கி விட்டார். அட* தினமும் நாம் இதிலேயே வரலாம் போல் இருக்கே என்று தோன்றியது.

    ஆனால் இந்த பயணம் நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்கு கீழே வாழ் மக்களுக்கு அது தினமும் பயணம் செய்ய சாத்தியம் இல்லாத ஒன்று என்ன. ஏதோ ஒரு நாள் ஆசைக்காக சென்று பார்க்கலாம் வெறும் 25 ரூ தான். நானும் அதை தான் செய்தேன். தினமும் 25 ரூ கொடுத்து வர இயலாத சூழல் மனம் சொகுசுக்கு ஆசைபடுகிறது. ஆனால் பேருந்து நிறுத்தத்தில் 5 ரூ கூடுதலே அதே தொலைவிற்கு நாம் கொண்டு செல்ல பேருந்து இருக்கும். என்றுமே சொகுசாய் வாழ நாம் ஏழை எளிய மக்களால் முடியாது என்றாவது ஒரு நாள் முடியும். இப்படி நானும் ஒரு நாள் வாழ்ந்து பார்த்தேன். அதை பதிவு செய்யவும் ஆசைப்பட்டேன் இதோ உங்கள் முன்…

    நீங்களும் ஒரு நாள் அரசு Volvo-வில் சென்று தான் பாருங்களேன் என்னை போல் அனுவித்து கூறுங்களேன்.

    நன்றி,
    பொள்ளாச்சி அருண்பாலாஜி ,

    No Comments
  • முன் மாதிரி !

     காலையில் நேரத்திலே எழுந்து மணியை பார்த்த அப்பமணி 9.30 a.m. ! அட என்னடா இன்றைக்கு நேரத்திலேயேஎழுந்து விட்டோமோ என்று தோன்றியது. சரி விடுஅலுவலகத்தில் போய் தூங்கிக் கொள்ளலாம் என்றுவிட்டு விட்டேன். எழுந்து பல் துலக்கிவிட்டு தேநீர்குடிக்க போகலாம்னு கிளம்பி போகும் போதேசுள்ளான்கள் சிலர் தெருவில் விளையாடிக் கொண்டுஇருந்தனர்.

    தேநீர் கடையில் செய்தித்தாளை மேய்ந்து விட்டு “அண்ணா ஒரு டீ” என்று தேநீர் தயாரிப்பவரிடம் சொல்லஅவர் அதற்கு “சார்! ஸ்டராங்கா இல்ல லைட்டா” நான்அதற்கு “நார்மல் ” என்று கூறிவிட்டு சுள்ளான்களைபார்த்த படி நின்று கொண்டு இருந்தேன். தேநீர்அருந்தி ஆயிற்று.

    வீட்டிற்கு வந்தால் தமிழ்நாட்டின் துயரம் (அதுதானுங்க பவர்கட்) மின் தடை. பொதுவாக எங்கபகுதியில் 11 மணியிலிருந்து 12 மணி வரைதான் மின்தடை (நான் சென்னையில் இருக்கங்க. அதனால்தான் 1மணி நேரம்) ஆனா இன்று மட்டும் 10 மணிக்கே நம்ம நல்லமனசுகார மின்துறை அதிகாரிகள் நன்மைசெய்துவிட்டார்கள்.

    அப்புறம் என்ன! மாடி படி நிழலில் உட்கார்ந்துயோசித்து கொண்டு இருந்தேன். அப்போது தெருவில்விளையாடும் சிறுவர்களை பார்க்க நேர்ந்தது. (இங்கேதான் கருவே அடங்கி இருக்கு)

    சிறுவர்கள் தன்னை அறியாமல் விளையாடிக் கொண்டுஇருந்தார்கள். சுள்ளான் ஒருவன் கட்டையாகஇருந்தான். அவனை விட சற்று உயரமாக உள்ளசுள்ளானை பார்த்து என்ன இன்னைக்கு யாருமேவரல?என்று கூறியவாறே சட்டென்று ஓடிமிதிவண்டியில் வரும் சுள்ளானை பிடித்து “டே!லைசென்ஸ் எடு” என்றான் . அதற்கு மிதிவண்டிசுள்ளானும் ஏதோ எடுத்துக் கொடுத்தான். சரி சரிஎல்லாம் சரியாய் தான் இருக்கு. போ!போ! என்று கூறஎனக்கு அப்போது தான் சிறிது புரியஆரம்பித்தது.அவன் போக்குவரத்து காவலராக (டிராபிக்போலீஸ்) விளையாடுகிறான் என்று.

    பிறகு மற்றெhரு மிதிவண்டியில் சுள்ளான் ஒருவன்வந்தான். அப்போது இந்த கட்டை சுள்ளான் “டே!டே!நிறுத்து, நிறுத்து. ஆர்.சி.புக் எங்கே? அப்போதுஇந்த சுள்ளான் தலையைச் சொரிய , நட,நட இன்ஸ்பெக்டர்கிட்ட நட,

    சார், இந்த சைக்கிள் காரனுக்கு இல்ல இல்ல. இந்தசைக்களுக்கு ஆர்.சி.புக் இல்லையாம் சார். அப்பொதுஅந்த அதிகாரி சுள்ளான் (இன்ஸ்பெக்டர்) சரி சரி பணம்எவ்வளவு வைச்சு இருக்கிற. சார் சார் நான் அவசரமாகஆஸ்பத்திரிக்கு போறேன் என்று கூற அதிகாரிசுள்ளான்சார் 200 ரூபாய் கொடுத்து விட்டு போஎன்று சொல்ல இவனும் ஏதோ கையில் கொடுக்கிறான்.

    இப்படியாக இந்த விபரித விளையாட்டு தொடர்கிறது.நான் இதை எதார்த்தமாக கலந்த ஆச்சர்யத்தோடுபார்த்து கொண்டு இருந்தேன். அப்போதுகுடியிருப்பில் இருந்து கரண்டு வந்தாச்சு அம்மா ! !என்ற சத்தம் காதில் விழ நான் எழுந்து என் வீட்டைநோக்கி சென்றேன். அப்போது எனக்கு அந்தசுள்ளானிடம் போய் கேட்க வேண்டும் என்றுதோன்றியது. “ யாரிடம் இதை நீ தெரிந்து கொண்டாய்என்று ” ஆனால் அதற்கு முன் என்னிடம் பதிலும்இருந்தது . நம் தேசத்தில் தான் தெருவிற்கு தெருகாவலர்கள் இதை செய்கிறார்களே என்று.

    என் வீட்டில் இருள் விலகியது. ஆனால் என் மனதில்இருள் அண்டியது.புதிய தலைமுறை, நாளைய தலைமுறை , எதிர்கால இந்திய என்றெல்லாம் சொல்லக் கூடிய இந்த இளம்மனதில் இப்படிப்பட்ட நஞ்சு விதைகள் விழுந்துஉள்ளதே என்று தான்.

    தொலைக்காட்சி பெட்டியை போட்டேன். அப்போதுஎன்னால் நம்மமுடியாதவாறு (இறைவனோ அல்லதுஇயற்கையோ அல்லது எதார்த்தமோ)

    “உன்னால் முடியும் தம்பி தம்பி ……….

    இந்த உலகம் இருக்கு உங்களை நம்பி என்று பாடல்ஒடிக்கொண்டு இருந்தது.

    இதில் இருந்து நான் என்ன கற்றுக் கொண்டேன்என்றால் தவறு செய்யக் கூடாது . அதுவும் சிறுவர்கள்முன் தவறு செய்யவே செய்யக் கூடாது.எக்காரணத்திற்கு ஆகவும் நான் தவறான முன்மாதிரியாக இருக்கக் கூடாது என்று தீர்மானித்துஉள்ளேன். ! !

     

    அப்ப நீங்க ?

    – பொள்ளாச்சி அருண்பாலாஜி-

    No Comments
  • இரண்டாம் நிலை குழந்தை பருவம்

    ஒரு அந்தி மாலை பொழுதில் சொந்த ஊருக்கு செல்லலாம் என்று பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நின்று கொண்டு இருந்தேன். அது வேளச்சேரி சோதனை சாவடியும் (செக்போஸ்ட்) மடுவாங்கரை பாலத்தையும் இணைக்கும் குறுகிய பாதை (40 அடி பாதை) அதில் என்றும் இல்லாதவாறு ஒரே பேருந்து நெறிசல் ஒலி சத்தம் என் காதுகளை கிழித்துக் கொண்டு இருந்தது.

    அப்போது ஒருவர் ஒரு பொக்கைவாய் கிழவியை கையை பிடித்து கூட்டி கொண்டு வந்தார்.அந்த கிழவியும் மிகவும் பொறுமையாக நகர்ந்து கொண்டு வந்தார். அதை பார்த்தவாறே இருந்தேன். அப்போது அந்த போக்குவரத்து நெரிசலிலும் ஒரு கில்லாடி பேருந்து நிறுத்தத்திற்கு ஓடி வந்தார்.

     

    அந்த பேருந்தில் பயணிகள் நிரம்பி வழிந்தனர். நிறுத்தத்தில் இருந்து பயணிகளால் ஏற முடியவில்லை. அப்போது மணி 6.40 அல்லது 6.50 இருக்கும் நான் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கே நின்று இருந்தவர்கள் எல்லாம் கடந்த 1 மணி நேரமாக நிற்பதாக சொல்ல நான் கண்டிப்பாக முன்பதிவு செய்த பேருந்தை பிடிக்க முடியாமல் போகும் என்று எண்ணிக் கொண்டேன். என்னிடம் அவ்வளவாக சுமை ஒன்றும் இல்லை. இருந்தும் என்னால் அந்த பேருந்திலும் ஏற முடியவில்லை. அவ்வளவு மக்கள் கூட்டம் பேருந்தில்.

    இதற்கிடையில் அந்த பொக்கைவாய் கிழவியை கூட்டி வந்தவர், “அம்மா நான் வேணும்னா ஆட்டோ எடுக்கட்டா? என்று கேட்க அதற்கு அந்த கிழவி “வேண்டாம்பா காசு செலவாகும் நம்ம பஸ்ஸிலியே போலாம் பா! என்ன? என்னாலதான் ஏற முடியாது”

    எனக்கு சமீபத்தில் இறந்த என் பாட்டியின் நினைவு தொற்றிக் கொண்டது. அந்த வயதான மூதாட்டியை பார்க்கும் போது இது எப்படி இந்த நெரிசலில் ஏற போகுது என்று தோன்றியது. என்னால் அந்த மூதாட்டியின் துறுதுறுவென இருக்கும்

    செயல்களை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அந்த மூதாட்டிக்கு ஒரு 70லிருந்து 78 வயதிற்குள் இருக்கும். என்னை மிகவும் ஈர்த்த விஷயம் அந்த மூதாட்டி நிற்காமல் சென்ற பேருந்தை நோக்கி ஓட முயற்சி செய்தது தான். என்னை அறியாமல்
    என் கண்களில் தண்ணீர் பெருக்கெடுத்தது. அதை துடைத்துக் கொண்டு பேருந்தை நோக்கினேன். மணி 7.30 ஆயிற்று. அப்பவும் எல்லா பேருந்தும் ஒரு மனிதர் கூட ஏறமுடியாமல் சென்றது. கடைசியாக நான் ஆட்டோவை பிடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு ஆட்டோ ஓட்டுநரை கேட்டேன். “அண்ணா கோயம்பேடு போலாமா?” என்று கேட்க, அதற்கு அவர் “இல்ல தம்பி ஒரே டிராபிக்கா இருக்கும் பா” என்று கூறினார்.

    அந்த ஒரு வழிப்பாதை “ஒரு வழியாக”இருந்தது. மணி 7.40 ஆயிற்று. அதே இடத்தில் நானும் அந்த மூதாட்டியும் நிற்கிறோம். அந்த மூதாட்டி அவர் மகனின் கையை விடவே இல்லை. கடைசி வரை நானும் இது அவனின் கை விடும் விடும் என்று எண்ணி நின்று கொண்டு

    இருந்தேன். அப்போதும் நாங்களும் (மூதாட்டியும் நானும்) பேருந்துகளில் ஏறும் முயற்சியை கைவிடாமல் முயன்றோம். இறுதியாக ஒரு பேருந்தில் நான் ஏற முயன்ற போது அந்த மூதாட்டியும் வந்தாள்… அப்போது படிக்கட்டில் பயணம் செய்யும்

    சில இளைஞர்களை பார்த்து “வழிவிடுங்கள் வழிவிடுங்கள் இல்லைன்னா கீழே இறங்கி ஏறுங்கப்பா” என்று கூறினேன். ஆனால் ஒருவர் கூட வழிவிடவில்லை. நான் ஏறிய பின் திரும்பி அந்த மூதாட்டியை பார்த்தேன் . படியில் ஏற முயற்சி செய்து கொண்டு இருந்தது. இதை அந்த படியில் பயணம் செய்யும் இளைஞர்களும் பார்த்தபடி நின்றனர். என் மனம் குமுறியது. நான் அந்த மூதாட்டியின் கையைப் பிடித்தேன். அப்போது எதிர்பார்க்காத விதத்தில் பேருந்து நகர்ந்தது. ஒருவர் கூட நடத்துனரையோ, ஓட்டுநரையோ தடுக்கவில்லை. சத்தமும் எழுப்பவில்லை. நான் விழபோகிவிட்டேன். எனினும் சுதாகரித்துக் கொண்டு அந்த மூதாட்டியை மேலே ஏற்ற முயற்சி செய்ய அவளின் மகனும் உதவினார். ஒரு வழியாக மூவரும் மேலே வந்தோம்.

    அப்போது அந்த மூதாட்டி அமர இடம் தேடியது. அமர்ந்திருந்த அனைவரும் முகத்தை திருப்பிக் கொண்டனர். எனக்கு அந்த கூட்டத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. கோபம் வந்தது. அதை அடக்கிக் கொண்டு, ஒரு பெண் மாற்று திறனாளி / முதியோர் அமரும் இடத்தில் அமர்ந்து இருந்தார். நான் அவர்களிடம் “ப்ளீஸ், இந்த பாட்டிக்கு இடம் கொடுங்க என்று சொல்ல அவர்களும் சலித்துக் கொண்டு எழ.. அந்த மூதாட்டி இரு கைகளையும் கூப்பி என்னைப் பார்த்தது. எனக்கு அழுகை வந்தது. என் மனதில் “இது என் கடமை” என்று கூறிக் கொண்டு பயணச் சீட்டு வாங்க போய்விட்டேன்.

    கோயம்பேடும் வந்தது. பேருந்தில் இருந்து இறங்கிவிட்டேன். ஆனால் மனதில் ஒரே சலசலப்பு. “எப்படி! அந்த பொக்கைவாய் கிழவி எப்படி வீட்டிற்கு போகும்”. இந்த போக்குவரத்து நெரிசலில் எப்படி சாலையைக் கடக்கும். இப்படியாக வந்து கொண்டே இருந்தது எண்ணம். மறுபுறம் இரண்டாம் நிலை குழந்தை பருவத்தை நினைத்து மகிழ்வதா , பயப்படுவதா? அல்லது வருத்தப்படுவதா என்று தோன்றியது. இந்த நகரத்தில் (நரகத்தில்) எப்படி இந்த மூத்த குடிமக்கள் வாழமுடியும்.

    “கத்தார்சிங், பகத்சிங், அப்பு, சிறுகண்டன், அபுபக்கர், குஞ்ஞம்பு, வாஞ்சிநாதன் போன்ற இளைஞர்கள் பிறந்த இந்த இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு உதவி செய்ய அந்த பேருந்தில் யாரும் முன்வரவில்லையே என்று தோன்றியது”.

    நான் எல்லோரையும் பொத்தாம்பொதுவாக சொல்லவில்லை. இருந்தாலும் என்னால் மூத்த குடிமக்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை பார்க்கையில் இளைய சமூகம் யாவும் அந்த குழந்தை போன்றவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்பது என் சிரம் தாழ்ந்த வேண்டுகோள்.

     

    ‘எங்கேயாவது பேருந்தில் முப்பனோ , மூதாட்டியோ நின்று கொண்டிருந்தால் தயவு செய்து அமர இடம் கொடுங்கள் மாறாக தலையை திருப்பிக் கொள்ளாதீர்கள். நாம் தான் நம் மூத்த குடியை பாதுகாத்து அரவணைக்க வேண்டும். இவர்களின் நிலைமை நீஙகள் நினைப்பது போல் சாதாரணம் அல்ல. நீங்கள் எங்கேயாவது மூத்தகுடி மக்களை பாருங்கள் அவர்களின் கஷ்டம் அப்பொழுது உங்களுக்கு தெரியும். பின்பு நீங்களாகவே உதவி செய்வீர்கள்.

    அவர்களும் நம் அம்மா அப்பாதான் ! ! 

     – பொள்ளாச்சி அருண்பாலாஜி

    No Comments

  • மதம் பிடிக்காத  யானைகள் ! ! !

    இந்த கதை நான் திரு
    ச்செந்தூர் சென்ற பொழுது அங்கு  இருக்கும் இரண்டு யானைகளை நினைத்து எழுதப்பட்டது .

     


     என்ன அஞ்சல வேளைக்கு போகலையா?
    இல்லை பா இன்னும் என் பாகன் வரல !
    ஓ! சரி ! உன் டுயுட்டி  முடிஞ்சிருச்சு  போல .

    ஆமா !
    நம்ம  ரெண்டு பேரையும் தனி தனியாகத்தான் அடைச்சு வெச்சு இருக்காங்க   ..

    ஷிபிட் மாரும்பொழுது  நாம் பேசக்க முடியுது ..
    ராத்திரியில்தான் நம்ம இருவர் முகத்தைக் கூட பார்க்கமுடியாது என்னா நடுவில ஒரு பெரிய சுவர் …

    பேசினாதான் கேட்கும் அதுவும் சத்தமா…. இதுல பக்தர்கள் கூட்டம் வேற  பார்வையாளர்களாக ..
    நம்ம தனிமையே போச்சு இந்த கோவில்ல இருக்கும் திரு
    ச்செந்தூர் முருகனுக்குத்தான் வெளிச்சம் !



    சரி என்னை விடு உன் கதை என்ன?

    பாவம் நீ கேரளாவுல யானை பள்ளிக்குடத்தில நல்ல சந்தோசமா இருந்திருப்ப..

    அஞ்சல நம்ம விதி அப்படியிருந்தா நாம என்ன செய்வது ?

    அட நீ ஒன்னு , எனக்கு இந்த விதி ,சதி ,கதியெல்லாம் தெரியாது …எந்த நம்பிக்கையும் இல்லை

    எல்லாம் இங்க வந்த பின்னதான் தெரியும் அதுவும் நம்மிடம் ஆசி பெற்றால் நல்லது நடக்கும்னு ,நம்ம சானத்தை மிதித்தால் படிப்பு வரும்.


    இப்படி நிறைய “கப்சாக்களை ” நினைச்சு  …சில சமயம் எனக்கு சிரிப்பு  தான் வருது …

    ஆமா நாமதான் கடவுளோட வாகனமாமே?

    அட அஞ்சல நாம தான் பிள்ளையாரோட வாகனம் !



    ஓ அப்படியா ! சரி அப்புறம் !!!

    தினமும் காலையில நமக்கு இங்க கடவுளுக்கு கிடைக்கிற சகல பூஜை எல்லாம் நடக்குது …

    ஏன் லட்சுமி நாம தான் கடவுளோட வாகனம் ஆச்சே ! கடவுளுக்கு சமமாக இருக்கிற நம்மள ஏன் லட்சுமி சங்கலியில் வச்சு இருக்கிங்க !??.. அதுவும் அந்த குச்சியால் குத்து விடுறாங்க பாரு…பிறகு நம்ம மேல அந்த பாகன் ஏறி உக்காருறான்

    அஞ்சல ! அது எல்லாம் நாம் சொன்னபடி கேக்குறதுக்கு இல்ல ..


    அப்ப மனுஷன் சொல்வதை தான் கடவுள் கேட்க்கனுமா ?

    இல்லை இல்லை நமக்கு மதம் கிதம் பிடிச்சா  இந்த மனுசங்க்களுக்குதானே ஆபத்து ….அதனால் தான் அஞ்சல …

    அப்படினா எதுக்கு நம்ம காட்டுல இருந்து கொண்டு வந்து நமக்கு மதம் பிடிக்க வைக்கணும் ???

    என்ன அஞ்சல சொல்ற ஒன்னுமே புரியவில்லை ???

    லட்சுமி,  காட்டுல நம்ம குடும்பத்தோட நல்லா சந்தோசமா வாழ்ந்து வந்து  இருந்தோம் … இந்த மனுசங்கதான் நம்மள இங்க கூட்டிகிட்டு வந்து நமக்கு மதம்  பிடிச்சுரும்னு நம்மள சங்கலியில கட்டி வெச்சு , அடிச்சு அவர்கள் மதத்தை நமக்கு பிடிக்க வைக்கிறாங்க பா

    அஞ்சல ?????

    புரிந்தவர்கள் சிந்தியுங்கள் ! புரியாதவர்கள் புரிந்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் …

    மதம் இன்னும் 

    பிடிக்காத ஒன்று
    கோவிலில் “யானை”களுக்கு…

    மதம் இன்னமும் 
    பிடித்தருக்கிறது
    மனிதனுக்கு …
    -பொள்ளாச்சி அருன்பாலாஜி –



    Related Posts Plugin for WordPress, Blogger...
    No Comments