• Elephants that are not religious… மதம் பிடிக்காத யானைகள்….


    மதம் பிடிக்காத  யானைகள் ! ! !

    இந்த கதை நான் திரு
    ச்செந்தூர் சென்ற பொழுது அங்கு  இருக்கும் இரண்டு யானைகளை நினைத்து எழுதப்பட்டது .

     


     என்ன அஞ்சல வேளைக்கு போகலையா?
    இல்லை பா இன்னும் என் பாகன் வரல !
    ஓ! சரி ! உன் டுயுட்டி  முடிஞ்சிருச்சு  போல .

    ஆமா !
    நம்ம  ரெண்டு பேரையும் தனி தனியாகத்தான் அடைச்சு வெச்சு இருக்காங்க   ..

    ஷிபிட் மாரும்பொழுது  நாம் பேசக்க முடியுது ..
    ராத்திரியில்தான் நம்ம இருவர் முகத்தைக் கூட பார்க்கமுடியாது என்னா நடுவில ஒரு பெரிய சுவர் …

    பேசினாதான் கேட்கும் அதுவும் சத்தமா…. இதுல பக்தர்கள் கூட்டம் வேற  பார்வையாளர்களாக ..
    நம்ம தனிமையே போச்சு இந்த கோவில்ல இருக்கும் திரு
    ச்செந்தூர் முருகனுக்குத்தான் வெளிச்சம் !



    சரி என்னை விடு உன் கதை என்ன?

    பாவம் நீ கேரளாவுல யானை பள்ளிக்குடத்தில நல்ல சந்தோசமா இருந்திருப்ப..

    அஞ்சல நம்ம விதி அப்படியிருந்தா நாம என்ன செய்வது ?

    அட நீ ஒன்னு , எனக்கு இந்த விதி ,சதி ,கதியெல்லாம் தெரியாது …எந்த நம்பிக்கையும் இல்லை

    எல்லாம் இங்க வந்த பின்னதான் தெரியும் அதுவும் நம்மிடம் ஆசி பெற்றால் நல்லது நடக்கும்னு ,நம்ம சானத்தை மிதித்தால் படிப்பு வரும்.


    இப்படி நிறைய “கப்சாக்களை ” நினைச்சு  …சில சமயம் எனக்கு சிரிப்பு  தான் வருது …

    ஆமா நாமதான் கடவுளோட வாகனமாமே?

    அட அஞ்சல நாம தான் பிள்ளையாரோட வாகனம் !



    ஓ அப்படியா ! சரி அப்புறம் !!!

    தினமும் காலையில நமக்கு இங்க கடவுளுக்கு கிடைக்கிற சகல பூஜை எல்லாம் நடக்குது …

    ஏன் லட்சுமி நாம தான் கடவுளோட வாகனம் ஆச்சே ! கடவுளுக்கு சமமாக இருக்கிற நம்மள ஏன் லட்சுமி சங்கலியில் வச்சு இருக்கிங்க !??.. அதுவும் அந்த குச்சியால் குத்து விடுறாங்க பாரு…பிறகு நம்ம மேல அந்த பாகன் ஏறி உக்காருறான்

    அஞ்சல ! அது எல்லாம் நாம் சொன்னபடி கேக்குறதுக்கு இல்ல ..


    அப்ப மனுஷன் சொல்வதை தான் கடவுள் கேட்க்கனுமா ?

    இல்லை இல்லை நமக்கு மதம் கிதம் பிடிச்சா  இந்த மனுசங்க்களுக்குதானே ஆபத்து ….அதனால் தான் அஞ்சல …

    அப்படினா எதுக்கு நம்ம காட்டுல இருந்து கொண்டு வந்து நமக்கு மதம் பிடிக்க வைக்கணும் ???

    என்ன அஞ்சல சொல்ற ஒன்னுமே புரியவில்லை ???

    லட்சுமி,  காட்டுல நம்ம குடும்பத்தோட நல்லா சந்தோசமா வாழ்ந்து வந்து  இருந்தோம் … இந்த மனுசங்கதான் நம்மள இங்க கூட்டிகிட்டு வந்து நமக்கு மதம்  பிடிச்சுரும்னு நம்மள சங்கலியில கட்டி வெச்சு , அடிச்சு அவர்கள் மதத்தை நமக்கு பிடிக்க வைக்கிறாங்க பா

    அஞ்சல ?????

    புரிந்தவர்கள் சிந்தியுங்கள் ! புரியாதவர்கள் புரிந்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் …

    மதம் இன்னும் 

    பிடிக்காத ஒன்று
    கோவிலில் “யானை”களுக்கு…

    மதம் இன்னமும் 
    பிடித்தருக்கிறது
    மனிதனுக்கு …
    -பொள்ளாச்சி அருன்பாலாஜி –



    Related Posts Plugin for WordPress, Blogger...
    Published on December 16, 2011 · Filed under: Article, Story; Tagged as: , , , , , ,
    No Comments

Leave a Reply