Archives
- August 2021
- May 2021
- January 2021
- December 2020
- November 2020
- October 2020
- July 2020
- July 2017
- October 2014
- June 2014
- March 2014
- January 2014
- October 2013
- August 2013
- March 2013
- February 2013
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- February 2012
- January 2012
- December 2011
- November 2011
- September 2011
Recent Articles
- 2nd wave COVID-19 Lockdown -Nalv distributed 40 Groceries bags to ayyampathi tribal people
- Second wave COVID-19 Lockdown Services-Nalvazhikatti Distributed 530+ food packets for destitute old age people on 16-June-2021
- 15-Jun-2021- Sankarankudi & Paramankadavu Settlement – Groceries & vegetables for 67 families – worth of Rs.70,000/-
- 13-Jun-2021- Nedukundram Settlement – Groceries & vegetables for 47 families – worth of Rs.43,000/-
- 8-Jun-2021- Kattupatti & Mavadappu Settlement – Groceries & vegetables for 110 families – worth of Rs.63,000/-
-
முன் மாதிரி !
முன் மாதிரி !
காலையில் நேரத்திலே எழுந்து மணியை பார்த்த அப்பமணி 9.30 a.m. ! அட என்னடா இன்றைக்கு நேரத்திலேயேஎழுந்து விட்டோமோ என்று தோன்றியது. சரி விடுஅலுவலகத்தில் போய் தூங்கிக் கொள்ளலாம் என்றுவிட்டு விட்டேன். எழுந்து பல் துலக்கிவிட்டு தேநீர்குடிக்க போகலாம்னு கிளம்பி போகும் போதேசுள்ளான்கள் சிலர் தெருவில் விளையாடிக் கொண்டுஇருந்தனர்.
தேநீர் கடையில் செய்தித்தாளை மேய்ந்து விட்டு “அண்ணா ஒரு டீ” என்று தேநீர் தயாரிப்பவரிடம் சொல்லஅவர் அதற்கு “சார்! ஸ்டராங்கா இல்ல லைட்டா” நான்அதற்கு “நார்மல் ” என்று கூறிவிட்டு சுள்ளான்களைபார்த்த படி நின்று கொண்டு இருந்தேன். தேநீர்அருந்தி ஆயிற்று.
வீட்டிற்கு வந்தால் தமிழ்நாட்டின் துயரம் (அதுதானுங்க பவர்கட்) மின் தடை. பொதுவாக எங்கபகுதியில் 11 மணியிலிருந்து 12 மணி வரைதான் மின்தடை (நான் சென்னையில் இருக்கங்க. அதனால்தான் 1மணி நேரம்) ஆனா இன்று மட்டும் 10 மணிக்கே நம்ம நல்லமனசுகார மின்துறை அதிகாரிகள் நன்மைசெய்துவிட்டார்கள்.
அப்புறம் என்ன! மாடி படி நிழலில் உட்கார்ந்துயோசித்து கொண்டு இருந்தேன். அப்போது தெருவில்விளையாடும் சிறுவர்களை பார்க்க நேர்ந்தது. (இங்கேதான் கருவே அடங்கி இருக்கு)
சிறுவர்கள் தன்னை அறியாமல் விளையாடிக் கொண்டுஇருந்தார்கள். சுள்ளான் ஒருவன் கட்டையாகஇருந்தான். அவனை விட சற்று உயரமாக உள்ளசுள்ளானை பார்த்து என்ன இன்னைக்கு யாருமேவரல?என்று கூறியவாறே சட்டென்று ஓடிமிதிவண்டியில் வரும் சுள்ளானை பிடித்து “டே!லைசென்ஸ் எடு” என்றான் . அதற்கு மிதிவண்டிசுள்ளானும் ஏதோ எடுத்துக் கொடுத்தான். சரி சரிஎல்லாம் சரியாய் தான் இருக்கு. போ!போ! என்று கூறஎனக்கு அப்போது தான் சிறிது புரியஆரம்பித்தது.அவன் போக்குவரத்து காவலராக (டிராபிக்போலீஸ்) விளையாடுகிறான் என்று.
பிறகு மற்றெhரு மிதிவண்டியில் சுள்ளான் ஒருவன்வந்தான். அப்போது இந்த கட்டை சுள்ளான் “டே!டே!நிறுத்து, நிறுத்து. ஆர்.சி.புக் எங்கே? அப்போதுஇந்த சுள்ளான் தலையைச் சொரிய , நட,நட இன்ஸ்பெக்டர்கிட்ட நட,
சார், இந்த சைக்கிள் காரனுக்கு இல்ல இல்ல. இந்தசைக்களுக்கு ஆர்.சி.புக் இல்லையாம் சார். அப்பொதுஅந்த அதிகாரி சுள்ளான் (இன்ஸ்பெக்டர்) சரி சரி பணம்எவ்வளவு வைச்சு இருக்கிற. சார் சார் நான் அவசரமாகஆஸ்பத்திரிக்கு போறேன் என்று கூற அதிகாரிசுள்ளான்சார் 200 ரூபாய் கொடுத்து விட்டு போஎன்று சொல்ல இவனும் ஏதோ கையில் கொடுக்கிறான்.
இப்படியாக இந்த விபரித விளையாட்டு தொடர்கிறது.நான் இதை எதார்த்தமாக கலந்த ஆச்சர்யத்தோடுபார்த்து கொண்டு இருந்தேன். அப்போதுகுடியிருப்பில் இருந்து கரண்டு வந்தாச்சு அம்மா ! !என்ற சத்தம் காதில் விழ நான் எழுந்து என் வீட்டைநோக்கி சென்றேன். அப்போது எனக்கு அந்தசுள்ளானிடம் போய் கேட்க வேண்டும் என்றுதோன்றியது. “ யாரிடம் இதை நீ தெரிந்து கொண்டாய்என்று ” ஆனால் அதற்கு முன் என்னிடம் பதிலும்இருந்தது . நம் தேசத்தில் தான் தெருவிற்கு தெருகாவலர்கள் இதை செய்கிறார்களே என்று.
என் வீட்டில் இருள் விலகியது. ஆனால் என் மனதில்இருள் அண்டியது.புதிய தலைமுறை, நாளைய தலைமுறை , எதிர்கால இந்திய என்றெல்லாம் சொல்லக் கூடிய இந்த இளம்மனதில் இப்படிப்பட்ட நஞ்சு விதைகள் விழுந்துஉள்ளதே என்று தான்.
தொலைக்காட்சி பெட்டியை போட்டேன். அப்போதுஎன்னால் நம்மமுடியாதவாறு (இறைவனோ அல்லதுஇயற்கையோ அல்லது எதார்த்தமோ)
“உன்னால் முடியும் தம்பி தம்பி ……….
இந்த உலகம் இருக்கு உங்களை நம்பி என்று பாடல்ஒடிக்கொண்டு இருந்தது.
இதில் இருந்து நான் என்ன கற்றுக் கொண்டேன்என்றால் தவறு செய்யக் கூடாது . அதுவும் சிறுவர்கள்முன் தவறு செய்யவே செய்யக் கூடாது.எக்காரணத்திற்கு ஆகவும் நான் தவறான முன்மாதிரியாக இருக்கக் கூடாது என்று தீர்மானித்துஉள்ளேன். ! !
அப்ப நீங்க ?
– பொள்ளாச்சி அருண்பாலாஜி-
Published on December 18, 2011 · Filed under: Article, Story, Useful; Tagged as: arunbalaji blog, arunbalaji selvaraj, role model