• நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி

    bar code identifying
    சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு
    என்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

    நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.இனிமேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .

    மற்ற நாடுகளின் முதல் எண்கள்
    00-13: USA & Canada
    20-29: In-Store Functions
    30-37: France
    40-44: Germany
    45: Japan (also 49)
    46: Russian Federation
    471: Taiwan
    474: Estonia
    475: Latvia
    477: Lithuania
    479: Sri Lanka
    480: Philippines
    482: Ukraine
    484: Moldova
    485: Armenia
    486: Georgia
    487: Kazakhstan
    489: Hong Kong
    49: Japan (JAN-13)
    50: United Kingdom
    520: Greece
    528: Lebanon
    529: Cyprus
    531: Macedonia
    535: Malta
    539: Ireland
    54: Belgium & Luxembourg
    560: Portugal
    569: Iceland
    57: Denmark
    590: Poland
    594: Romania
    599: Hungary
    600 & 601: South Africa
    609: Mauritius
    611: Morocco
    613: Algeria
    619: Tunisia
    622: Egypt
    625: Jordan
    626: Iran
    64: Finland
    690-692: China
    70: Norway
    729: Israel
    73: Sweden
    740: Guatemala
    741: El Salvador
    742: Honduras
    743: Nicaragua
    744: Costa Rica
    746: Dominican Republic
    750: Mexico
    759: Venezuela
    76: Switzerland
    770: Colombia
    773: Uruguay
    775: Peru
    777: Bolivia
    779: Argentina
    780: Chile
    784: Paraguay
    785: Peru
    786: Ecuador
    789: Brazil
    80 – 83: Italy
    84: Spain
    850: Cuba
    858: Slovakia
    859: Czech Republic
    860: Yugoslavia
    869: Turkey
    87: Netherlands
    880: South Korea
    885: Thailand
    888: Singapore
    890: India
    893: Vietnam
    899: Indonesia
    90 & 91: Austria
    93: Australia
    94: New Zealand
    955: Malaysia
    977: International Standard Serial Number for Periodicals (ISSN)
    978: International Standard Book Numbering (ISBN)
    979: International Standard Music Number (ISMN)
    980: Refund receipts
    981 & 982: Common Currency Coupons
    99: Coupons

    No Comments
  • Tamilaruvi manian – one of the greatest orator in Tamil, speaks on great leader Kamaraj. This is an effort to collect best tamil speeches on internet. Enjoy the speech.

         Kamaraj – by Tamilaruvi Manian (full)

    ஒரு சிறந்த பேச்சாளரால் விவரிக்கப் படும் தலைவர்-தனக்காக வாழாத் தனிப்பெருந்தலைவர் காமராஜ் அவர்கள்.

    அவரைப் போல் ஒரு மனிதரை நான் என் வாழ்க்கையில் மீண்டும் சந்திக்க விழைகிறென்.

    1 Comment

  • Marital Status: திருமணமான தகவல்
    Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்
    Father’s Name: தந்தை பெயர்
    Mother’s Name: தாயார் பெயர்

    தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்

    பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
    உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து

    Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
    Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
    Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
    File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
    Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

    [] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்

    அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும,உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

    பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும்,போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.

    முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)

    · ரேசன் கார்டு
    · குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
    · தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
    · மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
    · கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
    · வாக்காளர் அடையாள அட்டை
    · வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
    · துணைவின் பாஸ்போர்ட்

    பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

    · 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
    · பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
    · கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

    வேறு சான்றிதல்கள்

    · 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
    · உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
    · பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரிபப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
    அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM)தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா… நாள் மட்டும்தான் உண்மை,முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்… கால் கடுக்க நிற்க வேண்டும்,ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.

     

    No Comments
  • how to apply passport in online

    No Comments
  • Don’t Kill Your Eyes

     

    All the near death situations suggest suicides. Train, Rope, Ledge are symbolisms used for death. Tagline goes:
    “Don’t kill your eyes. Donate them instead.
    If you don’t donate your eyes at the time of death, you are literally letting them ‘die’ with you. So you are killing your eyes as you don’t let them live on”

     

    Yes, it is an emotional appeal to let eyes live on even after death. The important point that eyes can make someone else see for rest of their lives is left unsaid. Also the true message of need of vision by millions remains understated. Such social campaigns look good from positive angle. In this series death is more visible than the life. Person committing suicide is usually under much distress and not all would be in a state of mind to donate eyes before taking the plunge or tying the noose.

     

    No Comments
  • Dear Folkz.. Please afford your valuable 5 minutes, just to read this article, published in Tamil daily newspaper “DHINAMANI” written for ACTOR RAJINIKANTH..

    டிசம்பர் 12 என்ன நாள் என்று கேட்டபோது 80 சதவிகிதத்திற்கு அதிகமானோர் உடனடியாக “அன்று ரஜினி பிறந்த நாள்” என்று சரியாகக் கூறினர்.. அதே போல “டிசம்பர் 11 என்ன நாள்???” என்று கேட்டபோது உண்மையில் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே “அன்று மகாகவி பாரதியார் …பிறந்தநாள்” என்றனர். அவர்களில் கூட சிலர் “அன்று பாரதியார் பிறந்த நாளோ, இறந்த நாளோ” என்று சந்தேகத்துடன்தான் கூறினர்.

    வேற்று மாநிலத்தில் பிறந்த ரஜினி பிறந்த நாளைக் கோலாகலமாகக் கொண்டாடத் தெரிந்த நம்மில் பலருக்கு எட்டையபுரத்தின் எழுச்சி நாயகன் பாரதியின் பிறந்த நாள் கூட சரியாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் என்ன? நடிகர், நடிகையர் பிறந்த நாளை போட்டி போட்டுக்கொண்டு கொண்டாடும் ஊடகங்கள், பாரதியின் பிறந்த நாளைப் பற்றி அதிகமாக அலடிக்கொல்லாதுதான்.

    அது சரி… பாரதி என்ன செய்துவிட்டார்.???

    • தானும் தன் குடும்பமும் பசித்திருந்த போதும் தமக்கான உணவை காக்கை, குருவி எங்கள் ஜாதி என அவற்றுக்கு வாரி வழங்கிய ‘கஞ்சன்’ தானே??

    • தன்னுடைய எழுச்சிமிகு எழுதுகளாலும் புதிய சிந்தனை கொண்ட புரட்சி பாடல்களாலும் நாட்டில் சுதந்திர வேட்கையை விதைத்த ‘தீவிரவாதி’ தானே??

    • சாதிய வெறியையும், உயர் சாதி-கீழ் சாதி வேறுபாடுகளையும் களைந்து சமுதாயத்தில் சம தர்மத்தை நிலை நிறுத்த முயற்சித்த பிரிவினைவாதிதானே??

    • நாடு சுதந்திரம் பெறாத போதே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என சுதந்திரப் பள்ளு பாடிய ‘பிற்போக்குவாதி’ தானே??

    • இன்றும் சர்ச்சைக்குள்ளாகி வரும் சேது சமுத்திரத் திட்டம், நதி நீர் இணைப்பு குறித்து அன்றே ‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’, வந்கத்திலோடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளிற் பயிர்செய்குவோம் என்று விழித்துக்கொண்டே கனவு கண்ட ‘சொம்பிலிதானே’??

    நினைவில் வைதுக்கொண்டாட இன்னும் என்னவெல்லாம் காரியம் செய்து தொலைத்திருகிறான் பாரதி??

    No Comments
  • நண்பர்களே ஒரு எழுத்து, ஒரு மொழி,

    தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.

    உயிரெழுத்து: ஆ , ஈ , ஊ , ஏ, ஐ ,ஓ எழுத்து பொருள்

    ஆ – பசு

    ஈ – கொடு ,பறக்கும் பூச்சி

    ஊ – இறைச்சி

    ஏ – அம்பு

    ஐ – அழகு, தலைவன் , வியப்பு

    ஓ – வினா , மதகு


    ம வரிசை: மா . மீ , மு , மே, மை , மோ

    மா – பெரிய , விலங்கு

    மீ – மேலே , உயரம்

    மு – மூப்பு

    மே – மேன்மை , மேல் , மாதம்

    மை – கண்மை , இருள்

    மோ – முகர்தல் , மோதல்

    த வரிசை: தா, தீ, து, தூ , தே, தை

    தா – கொடு , கேட்பது

    தீ – நெருப்பு

    து – கெடு, உண், பிரிவு

    தூ – வெண்மை , தூய்மை

    தே – தெய்வம்

    தை – மாதம்

    ப வரிசை: பா, பூ, பே , பை , போ

    பா- பாட்டு, நிழல், அழகு

    பூ – மலர்

    பே – நுரை , அழகு

    பை – பசுமை , உறை

    போ – செல்

    ந வரிசை: நா , நீ, நே ,நொ, நை , நோ

    நா – நாக்கு

    நீ – நின்னை

    நே – அன்பு , நேயம்

    நை – வருந்து, நைதல்

    நொ – நொண்டி , துன்பம்

    நோ – நோவு வருத்தம்

    க வரிசை: கா , கூ , கை , கோ

    கா – சோலை , காத்தல்

    கூ – பூமி , கூவுதல்

    கை – கரம், உறுப்பு

    கோ – அரசன் ,தலைவன் , இறைவன்

    வ வரிசை: வா , வீ , வை , வௌ

    வா – அழைத்தல்

    வீ – பூ , அழகு ,

    வை – கூர்மை, வைதல், வைத்தல்

    வௌ – கௌவுதல், கொள்ளை அடித்தல்

    ச வரிசை: சா, சீ, சே , சோ

    சா- மரணம் , பேய் , சாதல்

    சீ – இகழ்ச்சி , திருமகள்

    சே – எருது

    சோ – மதில்

    மற்ற எழுத்து: யா 

    யா – மரம்

    No Comments
  • ராஜா ! மஹாராஜா ! !

    ராஜா ! மஹாராஜா ! !

    ஒரு நாள் மஹாராஜா அரசவையில் வீற்று இருக்கும் போது

    ஒருபெரிய சந்தேகம் வந்தது. அதை அங்கு இருக்கும் எல்லோரிடமும்கேட்டு

    கொண்டு இருந்தார். அந்த சந்தேகம் என்னவென்றால்

    இந்த உலகத்தை விட பெரியது எது?

    இந்த உயிரை விட பெரியது எது?

    இந்த கடலை விட பெரியது எது? என்று தான் அவரது சந்தேகம்.

    அவையில் இருந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் எழுந்து இதுநம்

    தலைமை அமைச்சருக்கு தான் தெரியும் என்று கூற அவரோ “சற்று

    அவகாசம் தாருங்கள் என்று கூறினார். நாட்கள் கடந்தன.எல்லோரும்

    அதை மறக்க மன்னனின் சேவகன் ஒருவன் “ அரசேநீங்க அன்றைக்கு கேட்ட

    கேள்விக்கு இந்த தலைமை அமைச்சர்இன்றைய வரை பதில் சொல்லாமல்

    ஏமாற்றி வருகிறார் என்று.

    “இதை கேட்ட அரசர் கோபம் கொண்டு அரசவைக்கு சென்றுதலைமை

    அமைச்சருக்காக காத்து இருந்தார்.

    அமைச்சர் வந்த உடன் “மஹாராஜா என்ன! இன்று சற்று கோபமாகஉள்ளீர்கள்

    என்று கேட்க அதற்கு அவர் “அமைச்சரே ! நீர் என்னஎன்னை ஏமாற்றி

    கொண்டு இருக்கிரிரா ?” இல்லை மஹாராஜா ஏன்?

    திடீர் என்று உங்களுக்கு இப்படி தோன்றியது.

    “நான் கேட்டகேள்விக்கு பதில் எங்கே?” நாளை காலையில் எனக்கு

    பதில் வந்துஆக வேண்டும் என்று கூறி எழுந்து சென்று விட்டார்.

    தலைமை அமைச்சர் வீட்டிற்கு சென்று சோகமாக உட்கார்ந்துஇருந்தார்.

    நான் என்ன செய்ய முடியும்.இந்த உலகை விட ,உயிரைவிட, கடலை

    விட பெரியது எது?என்று எவ்வாறு எனக்கு தெரியும்.

    அவர் மனைவியிடம் இதை சொல்லி வருத்தப்பட்டார். அவர்மனைவி “ நாம்

    மஹாராஜா வின் கோபத்திற்கு வீணாக ஆளாகபோகிறோம்.” என்று கூறினார்,

    இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த அவர்களின் மகன்“ராஜா”அங்கு

    வந்தான் . என்ன ஆகிவிட்டது இப்போ,மஹாராஜாவிற்கு உயிரை விட ,

    கடலை விட , உலகத்தை விட, எதுபெரியது என்று தெரிய வேண்டும் ,

    அவ்வளவு தானே நான் வந்துஅவருக்கு சொல்கிறேன் என்று ராஜா கூற

    “மகனே ராஜா! உன் அப்பாதலைமை அமைச்சர் அவருக்கே தெரியாதது

    உனக்கு எப்படி கண்ணாதெரியும் ?” என்று அம்மா கேட்டாள்.

    அப்பா, அம்மா என்னை நம்பி என்னிடம் விடுங்கள் , என்னை

    நாளைஅரசவைக்கு கூட்டி செல்லுங்கள் என்று சொன்னான் ராஜா .

    ஒருவழியாக இருவரும் சமாதானமாகி ஒப்புக் கொண்டனர்.அடுத்த

    நாள்காலை அரசவையில் ,

    “மஹாராஜா வருகிறார்” என்று கூற காவலாளி. எல்லோரும்ஆவலாக

    இருந்தார்கள். அப்படி என்ன தான் இந்த தலைமைஅமைச்சர் சொல்வார்

    என்று அதுவும் இவர் தன் மகனையும்மனைவியையும் அழைத்து வந்து

    இருக்கிறாரே! சிலர் ”எனக்குதெரியாது !” என்று கூறி மன்னிப்பு கேட்க தான் ,

    இவர் அழைத்துவந்தாக சொன்னார்கள். அரசர் வந்தாயிற்று . அரசவை கூடியது.

    தலைமை அமைச்சர் : மஹாராஜா உங்களின் கேள்விக்கு என்அருமை

    மகன் ராஜா பதில் அளிப்பான்.

    மஹாராஜா : என்ன உன் மகனா?

    தலைமை அமைச்சர் : ஆம்…

    மஹாராஜா : சரி வரச் சொல்

    ராஜா : உங்களின் கேள்விகள் என்ன மஹாராஜா ?

    மஹாராஜா : என் கேள்விகள் இந்த உலகை விட,உயிரைவிட,கடலை

    விட பெரியது என்ன? என்பது தான்.

    ராஜா : மிகவும் சுலபமானது மஹாராஜா?

    மஹாராஜா : எப்படி?

    ராஜா : உலகை விட பெரியது

    காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்

    ஞாலத்தின் மாணப் பெரிது .

    விளக்கம் :தக்க காலத்தில் ஒருவன் செய்த உதவி,சிறியதாகஇருந்தாலும்,

    அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தை விட மிகப்பெரியதாகும்.

    ராஜா : உயிரை விட பெரியது ?

    ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

    உயிரினும் ஒம்பப் படும்.

    விளக்கம் : ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் அந்தஒழுக்கமே

    உயிரினும் மேலானதாகப் போற்றப்படும்.

    ராஜா : கடலை விட பெரியது ?

     

    “ பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

    நன்மை கடலிற் பெரியது ”

    விளக்கம்: பயனை எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவியாகிய,

    அன்புடைமையை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை

    கடலினும் மிகப் பெரியதாகும்.

     

    இப்போது உங்களின் கேள்விகளுக்கு பதில் கிடைத்ததா என்று

    ராஜாமஹாராஜாவிடம் கேட்க அவர் தலை குனிந்து நின்றார்.அந்தஅவையே

    ராஜாவின் அறிவு கூர்மையை பார்த்து வியந்து நின்றது.

    இந்த கதையில் இருந்து நாம் கற்றுக் கொண்டது,என்னவென்றால் திருக்குறளில் அனைத்திற்கும்விடை உண்டு.பின்பு பிறரிடம் திறமையையேபார்க்க வேண்டும்வயதை அல்ல

    -பொள்ளாச்சி அருண்பாலாஜி

    1 Comment
  • கல்வி ஆராய்ச்சிகள் பகுதியில் மொழி கற்பித்தலுக்கான புதிய அணுகுமுறை..-பொள்ளாச்சி நசன்

    http://www.naalorunool.com/kal/arachi/innov/innvo89-u8.htm

    மேலுள்ள இணைப்பில் கல்வி ஆராய்ச்சிகள் பகுதியில் மொழி கற்பித்தலுக்கான
    புதிய அணுகுமுறைக்கான படியானது. இது பொள்ளாச்சி நசன் அவர்களால்
    தரப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து படித்துப் பார்த்து உங்கள் கருத்தை
    எழுதவும்.

    பொள்ளாச்சி நசன்

    இப்படிக்கு,
    பொள்ளாச்சி அருண்பாலாஜி,
    9600085388

    4 Comments
  • கதை சொல்லி – அ. வெண்ணிலா (A. Vennila)

    “என் உடலை விதைத்திருக்கிறார்கள்
    என் மார்புக் காம்புகள் நீரூற்ற‌
    பூச்செடிகளும் மரங்களும்
    துளிர் வி ட்டு வளர்ந்து
    விருட்சமாயிருந்தன.
    விளையாட
    சிட்டுக் குருவிகளும் புறாக்களும்
    போட்டியிட்டன.

    உழுதார்கள் விதைத்தார்கள்
    அறுவடை செய்தார்கள்.
    காலாதீதத்தில்
    என் உடல்
    நல்ல விளைநிலமாயிருந்தது.
    வண்ணத்துப் பூச்சிகளும்
    தேடி வரும் ஆவலில்
    பூச்செடிகளுக்காய் ஏங்கியிருந்தேன்.
    முட்களுக்கும் சுள்ளிகளுக்கும்
    அதிக தேவையிருந்ததால்
    என் உடலில் அதிகம் விதைத்தார்கள்.

    என் பால் வாசம் நுகர்ந்து
    வேலி வரை வந்து
    உள் நுழைய முடியாமல்
    தவித்துக் கொண்டிருக்கும்
    வண்ணத்துப் பூச்சிகளுக்காகவும்
    தட்டான்களுக்காகவும்
    என் உடலை சுருட்டிக் கொண்டு
    தொட்டிச் செடி பூவாக்கி
    காத்திருக்கிறேன்.
    சூரிய‌னுக்கு வெகு கீழே.”

    – அ.வெண்ணிலா.

    கதை சொல்லிக்காக சென்னையிலிருந்து வந்தவாசி செல்வதற்கு வெளிக்கிட மதியத்தை தாண்டிவிட்டிருந்தது. கவிஞர் அ.வெண்ணிலா பின்னேரம் நான்கு முப்பது மணிக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார். சென்னையிலிருந்து வந்தவாசிக்கு இரண்டரை மணித்தியாளத்திற்குள் சென்று விடலாம் அல்லது அதிகபட்சம் மூன்று மணித்தியாளம். பேருந்தின் சன்னலில் வாய் பார்த்து வந்து கொண்டிருந்தேன்.வேடிக்கைப் பார்ப்பது சிறுவயதில் இருந்தே அறியாமல் என்னுள் தொற்றிக் கொண்ட விடயம். ‘ஒருவேலைக்கு அனுப்பினா கப்பல் பார்க்க விட்ட சேவகன் மாதிரி இல்லாம கெதியாண்டு வீட்டுக்கு வந்து சேர்’என்னும் வசவோடே வீட்டில் வளர்ந்தேன். காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இன்னும் தீர்ந்தபாடில்லை. காணக் காண கிடைக்கும் போதை திகட்டுவதில்லை. நான‌ற்ற‌ நிலையில் சிந்திப்ப‌த‌ற்கும் காட்சி வெளி தேவையாக‌ இருக்கிற‌து

    சாலையின் இருமங்கிலும் ஆச்சிரியப் பட வைத்தவை கிழடு தட்டிப் போன மரங்கள். பழமையான ஊர் என்பதற்கு சாட்சிகளாக நின்று கொண்டிருந்தன. அனேகமான மரங்களில் பட்டைகள் கிழவனின் முகச்சுருக்கங்கள் போல் மாறிவிட்டிருந்தது. சில மரங்களில் தண்டுகள் பொக்கை வாய்களாய் உள்வற்றிப்போய் சிறு தடி போல் நின்று பெரும் கிளைகளை தாங்கிக் கொண்டு நின்றது. பச்சை நிற இலைகள்இன்னும் பசுமையான வசந்தங்களைப் காணப் போவதை சொல்லிக் கொண்டிருந்தது. முன்னர் அங்கங்கே வெட்டி விடப்பட்ட கிளைகள் மரத்தில் கண்களைப் போல மாறியிருந்தது. பேருந்து செல்லும் வழிகளிலெல்லாம் பழமையான கோவில்களை காண முடிந்தது. ஊரின் பெயர்ப் பலகைகளும் மிக விசித்திரமான அழகான பெயர்களைத் தாங்கி நின்றது.

    வந்தவாசி பேருந்து நிலையத்தில் இறங்கி சற்றுத் தொலைவில் உள்ள அம்மையப்பட்டு என்னும் ஊரில் உள்ள பாடகசாலைக்கு கொஞ்சம் தள்ளி உள்ள பாதையில் இருக்கிறது அ.வெண்ணிலாவின் வீடு. வெண்ணிலாவின் வீட்டின் பெயர் அகநி இல்லம். அகநி என்பது மூன்று குட்டி இளவரசிகளின் பெயர்களுடைய முதல் எழுத்து. அ = அன்புபாரதி, க = கவின் மொழி, நி = நிலாபாரதி. இதில் அன்புபாரதியும், நிலாபாரதியும் இரட்டையர்கள். வெண்ணிலாவின் கணவரும் கவிஞர். அம்மா அப்பா இருவரும் கவிஞர்களாக இருப்பாதல் குழந்தைகளுக்கும் கவிதை மேல் நாட்டம் இயல்பாக இருக்கிறது. மூவருக்கும் வாழ்க்கை தேர்வு மருந்துவர், ஆட்சியர் என பட்டியலிட்டாலும் தவறாமல் ஒரு மாற்றுத் தேர்வாக கவிஞர் ஆவதையும் குறிக்கோளாக வைத்துள்ளார்கள். கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, பொது அறிவுப்போட்டியென பரிசுகளை வென்று வரத் தொடங்கி விட்டார்கள்.

    தேனீர் உபசரிப்புடன் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டபின் கதைகளை பதிவு செய்யத்தொடங்கினோம். வெண்ணிலா கதை சொன்ன விதம் நிறம்ப அழகு.

    அவர் குரலின் இனிமை கதைகளோடு ஒட்டிக் கொண்டது. கதைகளைச் சொல்லும் போது அவர் குரலில் ஏற்ற இறக்கங்கள் கதாபாத்திரங்களின் ஒத்த தன்மையோடு மாறிவிடும். சில நேரங்களில் கதாபாத்திரங்களை போல் நடித்துக் காண்பித்து கதைகள் சொல்கிறார். தாயையும் மகளையும் பற்றி வரும் சிறுகதையில் அவரே தாயாகவும் மகளாகவும் உருமாறிக் கொண்டிருந்தார். ‘மலம்’ கதையில் வரும் துன்பியல் நகைச்சுவையை தன் மனதில் உள்ளதை வார்த்தைகளில் வழி கடத்துவது அவ்வளவு எளிதல்ல. பாதிரியாரின் நிலையை எளிதாக கற்பனை செய்ய முடிந்திருந்தது அவர் குரலில். தன்னுடைய சிறுகதையைச் சொல்லும் போது ‘அவ்வளவு பட்டாம்பூச்சி’ என்கிற பொழுது அவர் கண்களும் மூடியேஇருந்தது.

     

    “காக்கா க‌தை
    குட்டி இள‌வர‌சி க‌தை
    தேவதை க‌தை என‌
    சொல்லி ம‌கிழ்ந்த‌
    பேச்சுக்க‌ளைப் ப‌ரிமாறிய‌
    இர‌வொன்றில்
    ந‌ம்மால்
    குழ‌ந்தைக‌ளைப் போல்
    க‌ட்டிய‌ணைத்து
    உற‌ங்க‌ முடிந்த‌து”

    – அ.வெண்ணிலா

    அடுத்து தொடங்கியது மழலைகளின் கதை சொல்லல். அவர்கள் கதைகளுக்குள் நுழைய அவர்களின் வயதினராலேயே முடியும். அதியுயர்ந்த கற்பனைகளுக்கெல்லாம் இடம் கொடுக்கும் வயது அது. அவர்களின் நகைச்சுவை உணர்வு நம்மைப் போல் மழுங்கிய ஒன்றல்ல. சிரிப்பும் க‌ற்ப‌னையும் அத‌ன் உன்ன‌த‌ நிலையில் செய‌ல்ப‌டும் த‌ருண‌ங்க‌ள் அது. நிறைய‌ க‌தைக‌ளைத் த‌ம‌க்குள் வைத்துக்கொண்டிருந்தார்க‌ள். முல்லாக் க‌தைக‌ள் தொட‌ங்கி அவ‌ர்க‌ளுள் நிறைந்திருந்த‌ க‌தைக‌ள் ஏராள‌ம். க‌தைக‌ள் சொல்ல‌ அவ‌ர்க‌ள் எந்த‌ த‌ய‌க்க‌மும் காட்ட‌வில்லை. க‌தைக‌ளை ஆர‌ம்பித்தால் போதும் சொல்லிக்கொண்டே சென்றார்க‌ள்.

    க‌தை சொல்லி முடித்து வெளியே வ‌ந்தேன் . இருட்டிய‌ வானில் அரை நில‌வோடு வெள்ளிக‌ள் மிக‌ப்பிர‌காச‌மாக் மின்னிக் கொண்டிருந்த‌ன‌. குதுகாலிக்கும் ம‌ன‌நிலையை என்னுள் கிள‌றி விட்ட‌து. ‘க‌ப்ப‌ல் பார்க்க‌ விட்ட‌ சேவ‌க‌ன் என்ன‌ செய்திருப்பான்’ என‌ சிறுவ‌ய‌து முதல் யோசித்திருக்கிறேன். பதிலில்லை. இந்த‌ சேவ‌க‌ன் க‌தைக‌ளோடு க‌தைக‌ளின் வாச‌னையோடு த‌ன்னை இழ‌ந்து திரும்புகிறான்.

    அ. வெண்ணிலாவின் கதைகளை கேட்க கீழே உள்ள ப்ளே ஐகானை அழுத்தவும்.


    http://koodu.thamizhstudio.com/kadhaisolli_18.php

    Related Posts Plugin for WordPress, Blogger...
    No Comments